Tuesday 31 December 2013

TNPSC GROUP I தேர்வு அறிவிப்பு



தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் - குருப் 1 க்கான தேர்வு விபரம் மற்றும் தரவிறக்கம்.


  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2014

        ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

  • விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.01.2014 வங்கி அல்லது தபால் துறை மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும்.                                                   
  • விண்ணப்பகட்டணம்:                                                                                               முதல் நிலை தேர்வு: ரூ 125/- முதன்மை(main exam) எழுத்து தேர்வு: ரூ 125/-
  • தேர்வுக்கான தேதி: 26.04.2014 10 a.m to 1.00 p.m
  • வயது வரம்பு: 21 முதல் 30 வரை


கீழ்க்கண்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது
1. DEPUTY COLLECTOR - Tamil Nadu Civil Service -3 posts
2. DEPUTY SUPERINTENDENT OF POLICE -Tamil Nadu Police Service - 33 posts
3.ASSISTANT COMMISSIONER -Tamil Nadu Commercial Tax Service - 33 posts
4. ASSISTANT DIRECTOR OF RURAL DEVELOPMENT DEPARTMENT - Panchayat - 10 posts

அனைத்து பதவிகளுக்கான சம்பள விகிதம்:ரூ 15,600 - 39,100/-

இத்தேர்வு பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட இணைப்பை கிளில் செய்து தரவிறக்கம் செய்து படிக்கவும்.
http://www.tnpsc.gov.in/notifications/17_2013_not_eng_grp1_2013.pdf

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை சொடக்கவும்
http://tnpscexams.net/



Friday 27 December 2013

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டம்!!



வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் "மகாத்மா காந்தி பிரவாசி சுரக்க்ஷா யோஜனா" MGPSY (Mahatma Gandhi Paravasi Suraksha Yojana)  எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டம் வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தால் (MOIA) வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான, தன்னார்வத்திட்டமாகும்.

இந்தியாவுக்குத் திரும்பி வரும்போதான குடியேற்றத்துக்கெனவும், அதோடு வயதான காலத்திற்கான சேமிப்புக்காகவும், வெளிநாடுகளில் பணி புரிகையில் அவ்வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்துக் கொள்ள இத்திட்டம் உதவி செய்யும். மேலும் MOIA ஆனது ஒரு ஆயுள் காப்புறுதித் திட்டத்தையும் அனைத்து MGPSY சந்தாதாரர்களுக்கும் வழங்கும்.

இத்திட்டத்தில் இணைத்து கொள்ள ஆர்வமுள்ள, தகுதியுள்ள பணியாளர்கள் தங்கள் விண்ணப் படிவங்களையும், அடையாள ஆதரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

இத்திட்டத்தில் சேர தகுதிகள்:

1) ECR Passport மற்றும் ECR நாடொன்றில் செல்லுபடியாகும் ஒரு பணி அனுமதி அல்லது வேலை ஒப்பந்தம்.

2) வயது 18  முதல் 50 வரை.

3) சொந்தப்பெயரில் வங்கிக்கணக்கு.


பயன்கள்:

இத்திட்டத்தில் இணைகின்ற தகுதியுடைய வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 3 முக்கியமான பயன்களைப் பெறுவார்கள்.
1) NPS -லைட் இடமிருந்து ஓய்வுதிய பயன்.

2) UTI AMC இடமிருந்து மறுகுடியேரும் (R&R) சேமிப்புகள்.

3) LIC இடமிருந்து இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம்.

சந்தா மற்றும் அரசு பங்களிப்பு விபரம்:

ஆண்டொன்றுக்கு ஆண்/பெண் சந்தாதாரர் ஒருவருக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை: ரூபாய் ரூ 5,000/-

ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 1,000 + 900
(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 2,000 + 900)

ஆக மொத்தம், ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 1,9௦௦ =6,900 ஆகும்.

(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 2,9௦௦ = 7,900 ஆகும்.

MOIA இன் பங்களிப்பு 5 ஆண்டுகளுக்கு அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்த காலம் இதில் எது குறைவோ அந்த காலத்துக்கு வழங்கப்படும்.

முதிர்ச்சி தொகை வழங்கும் முறை:
இரண்டு முறையில் பணம் திரும்ப வழங்கப்படும்

1) On return முறை: இம்முறையில், வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்பிய பின்னர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

2) On Retirement முறை: இம்முறையில் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு பணம் திரும்ப அளிக்கப்பட்டு , மீதிப்பணம் ஓய்வூதிய அடிப்படையில் மாத மாதம் வழங்கப்படும்.


எனவே வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களே உடனே  " The ministry Of Overseas Indian Affairs" தொடர்புகொண்டு இத்திட்டத்தில் சேர முயற்சி செய்யுங்கள். இது உங்களது பிற் காலத்திற்கு உதவும்.

துபாய் நண்பர்கள் இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற அல்லது இந்த திட்டத்தில் இணைய கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். (ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழேயுள் ள கமெண்ட் பாக்ஸ் ல் என்னிடம் கேட்கலாம்)

துபாய் முகவரி:
பாங்க ஆப்ப் பரோடா கிளை, இந்திய தொழிலாளர் வள மையம்
UAE அலுவலகம் 3 PM - 7PM (வேலை நாட்களில்)
இலவச தொலைபேசி அழைப்பு எண்: 1800 113 090 (இந்தியா) அல்லது 80046342 (UAE)

மின் அஞ்சல் முகவரி: inf.mgpsy@moia.nic.in அல்லது help@iwrc-uae.com













Tuesday 10 December 2013

விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?



விக்கல். இது எப்ப வரும்,எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.. ஆனா...வரவேண்டிய நேரத்தில தானா வரும். வந்த பின்னர் அத தடுக்க முடியாது.

விக்கல் என்பது "டயாப்ரம்" என்ற மெல்லிய தசை நம்ம மார்பகத்துல இருக்கிறது. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த தசை சுருங்கி விரிகிறது. அதாவது நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது சுருங்கி, சுவாசத்தை வெளியிடும் போது விரிகிறது...

சரி, இப்ப மேட்டருக்கு வருவோம்.

விக்கல் என்பது "டயாப்ரம்" எனும் தசை தோலின்   "சுருங்குதலே" ஆகும்

 "டயாப்ரம்" சுருங்குவதற்கு "ப்ரெனிக் நெர்வ்ஸ்" எனும் ஒரு வகை நரம்புகள் . இந்த நரம்புகளில் திடிரென ஏற்படும் ஒரு வித எரிச்சல் காரணமாக  "டயாப்ரம் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நம் நுரையீரலிற்கு செல்லும், இதனை சாமாளிக்க "எபிக்லாட்டிஸ்" எனும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம் அதனால் ஏற்படும் விக் விக் என்ற சப்த்தம் தான் விக்கல் என்கிறோம்.

விக்கல் திடிரென தன்னிச்சையாக ஏற்படும் ஒரு நிகழ்வு தானாம். இது நம்முடைய உடம்பிற்கு அவசியம் இல்லாத.... சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஒரு ஆய்வு.

கிராமங்களில் விக்கல் வந்தால் தண்ணிய குடி என சொல்லுவார்கள், தண்ணிரை குடிக்கும் போது தடங்கள் ஏற்பட்டு ப்ரெனிக் நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால் வந்த விக்கல் நின்று விடும்.

சில பேர் விக்கல் வரும் போது சர்க்கரையை (சீனி) சாப்பிடு என்பர்.. இது ஏன் அப்படின்னு ஆராய்ந்து பார்த்தா...
நாக்கில் திடிரென விழும் இனிப்புச்சுவையால் நரம்புகள் தூண்டப்பட்டு விக்கல் நிற்க உதவுகிறது.

Monday 9 December 2013

கணினியில் சில குறியீடுகளை எளிதாக உருவாக்க



Alt + 0153  => ™
Alt + 0169 => ©
Alt + 0174  => ®
Alt + 0176 => °
Alt + 0177   => ±
Alt + 0182   => ¶
Alt + 0190 => ¾
Alt + 0215 => ×
Alt + 0162 => ¢
Alt + 0161 => ¡
Alt + 0191 => ¿
Alt + 1 => ☺
Alt + 2 => ☻
Alt + 15 => ☼
Alt + 12 =>♀
Alt + 11 => ♂
Alt + 6 => ♠
Alt + 5 => ♣
Alt + 4 => ♦
Alt +3 => ♥
Alt + 13 =>♪
Alt + 14 => ♫
Alt + 8721 => ¶
Alt + 251 => √
Alt + 8236 => ,
Alt + 24 => ↑
Alt + 25 => ↓
Alt + 26 => →
Alt +27 => ←
Alt +18 => ↕
Alt + 29 => ↔





Tuesday 29 October 2013

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா? உங்கள் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு!



தமிழத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு அனைவரும் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டாட விரும்புவர். பெரும்பகுதியினர் சென்னையில் தான் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவ்வகையான பண்டிகைகளுக்கு செல்லும் போது திருடர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். பட்டப்பகலிலே தைரியமாக கொள்ளை அடிக்க கூட்டம் இருக்கும் போது வீட்டில் யாரும் இல்லை என அறிந்தால் கேட்கவா வேணும்.

இதனை தடுக்கவே மாநகர போலிஸ் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது

வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்குச் சென்று தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக மாநகர காவல் துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட பூட்டியிருக்கும் வீடுகளை அந்தந்த பகுதி போலீஸார் இரவும் பகலும் கண்காணிப்பர்.
  வீட்டை பூட்டிச்செல்லும் போது தங்களது பயண விபரங்களையும்,அதாவது புறப்படும் நாள்,திரும்ப வரும் நாள் போன்ற விபரங்களை வீட்டில் மதிப்பு மிக்க பொருள் உள்ளதா என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இதற்காக எஸ்.எம்.எஸ் பதிவேடு ஒன்று பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

இந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும்  உடனுக்குடன் சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் மாநகர போலீஸ்  கமிஷனர் அலுவலத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் களை  அந்தந்த காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு மஞ்சள் நிற பைக்கில் வரும் போலீஸார் அந்த வீடுகளை பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீஸார்  இரவிலும் பாதுகாப்பில் ஈடுபடுவர்கள். சம்பந்தபட்ட வீட்டில் பணிபுரியும் தொழிலாளிகள், பால் காரர்கள், காய்கறிகாரர் மற்றும் பேப்பர் காரர்கள் கண்காணிக்கப்படுவர்.

வீடு பூட்டியிருக்கு என்ற தகவலை 9840700100 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்ட முறையுள் தகவல் அனுப்பவேண்டும்.

Locked House Door No.
Locality:
From date:

Monday 28 October 2013

"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து விடு" !!!


மந்தியூர் எனும் கிராமத்தில் ஒரு அம்மா தன் பிள்ளையை மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் வளர்த்து வந்தாள். அவன் நன்றாக படித்து கல்யாண வயதை அடைந்த உடன் அவனுடைய அம்மா அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவன் கல்யாணம் ஆன பின்னும் தன்னுடைய அம்மா சொல்லை மதித்து அதன் படி நடந்து வந்தான். சில காலம் சென்றது, அவன் அம்மாவிடம் சென்று "நான் விருந்துக்கு மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன்" என்றான். அதற்க்கு அவனுடைய அம்மா "போய் வா மகனே, "மோட்டு" தெரிஞ்சா உடனே கிளம்பி வந்து விடு" என சொன்னாள். அவனுக்கு புரியவில்லை. இருந்தாலும் "சரி" எனக்கூறிக்கொண்டு விருந்துக்கு சென்றான்.

அங்கு அவனுக்கு நல்ல உபசரிப்பு. முதல் நாள் ஆட்டுக்கறிகுழம்பு, மறுநாள் கோழிக்கறி, மூன்றாம் நாள் மீன் கறி குழம்பு ...என  சென்றது. அந்த நேரம் வயல் அறுவடை காலம் எனவே அனைவரும் வயல் அறுவடைக்கு மும்முரமாக இருந்தனர். மாமியார் வீட்டிலும்  அனைவரும் வயலுக்கு சென்றதால் மனைவி மட்டுமே இருந்தாள். மதிய நேரம்...  மனைவி தன்னுடைய கணவனை சாப்பிட அழைத்தாள், கணவனும் வந்து உட்கார்ந்தான் மனைவி மெதுவாக கணவனிடம் சென்று " இன்றைக்கு அறுவடை என்பதால் அனைவரும் வயலுக்கு சென்று விட்டனர் எனவே சமைக்க நேரம் இல்லை இன்னைக்கு மட்டும் பழைய சோறு கஞ்சி சாப்பிடுறிங்களா?" என கேட்டாள். அதற்க்கு அவன் பரவாயில்லை கொண்டுவா" என கூறினான். அந்த காலத்தில் பெரும்பாலான வீடுகள் மோட்டு வீடுகளாக (முக்கோண வடிவில்) தான் இருக்கும். இவன் பெரிய கிண்ணத்தில் இருந்த அந்த பழைய சோறு கஞ்சியை சாப்பிட தயாரானான் அப்பொழுது அந்த கஞ்சியில் உற்றுப்பார்த்தான் அதில் , அந்த வீட்டின் மேலுள்ள மோட்டு தெரிந்தது. இப்பொழுது அவனுடைய அம்மா சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. பொறுமையாக சாபிட்டான். பின்னர் மாலைபொழுது ஆனதும் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான்.

இத தான்.. கிராமங்களில் சொல்லுவார்கள் .. "விருந்தும், மருந்தும் மூன்று நாள்" என.

Monday 21 October 2013

சொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா?


பொதுவாக பெரும்பாலோர் தன்னுடைய பிள்ளைகளை  சொந்த உறவினர்களுக்கே திருமணம் செய்து வைக்கவே விரும்புவர். ஏனெனில் அதுவே ஒரு பாதுகாப்பு என நம்புகின்றனர்.

இது ஒரு விதத்தில் நன்மை என்றாலும் பெரும்பாலோருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதில் பார்வை குறைவு, இரத்த கசிவு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது உடலில் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும். உடம்பில் எங்காவது அடிப்பட்டால் இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்க நமது உடம்பில் உள்ள இரத்தம் உறையும் தன்மையை அடையும். இது  இரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தம் உறையும் தன்மை இருக்காது, இதனால் அவர்களுக்கு இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

இந்நோய் மரபு ரீதியானது இது ஆண்களையே அதிகம் பாதிக்கிறது, இந்நோய் உள்ளவர்களுக்கு பல் ஈருக்களுக்கிடையே இரத்த கசிவு ஏற்படும், சிறு காயம் ஏற்ப்பட்டாலும் பெருமளவு  இரத்தம் வெளியேறும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

அடுத்து சொந்தத்தில் திருமணம் செய்வதால் இருவருக்கும் ரத்த அணுக்களில் அதிக வேறுபாடு இருக்காது இதனால் பார்வை கோளாறு ஏற்படும். எனக்கு தெரிந்த ஒருவர் அவரது தாய் மாமா பொண்ணை தான் திருமணம் செய்தார். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன அவற்றில் இரண்டு பேருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. அதாவது கிட்டப்பார்வை நோய். அருகில் உள்ள பொருள்  அவ்வளவு எளிதாக தெரியாது. அதுவும் மாலை நேரத்தில் பார்வை கோளாறு அதிகாமாக இருக்கும். இது நான் நேரில் பார்த்த நிகழ்ச்சி.

எனவே சொந்த பந்தத்தில் திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டால் அவர்களுடைய எதிர்கால  சந்ததிகள் எந்தவித குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கும். 

Saturday 12 October 2013

மக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


மக்காவில் ஹஜ்ஜ் புனித யாத்திரை  இன்று மீனா வில் இருந்து தொடங்குகிறது. நாளை அராபா தினம் ஆகும்.

சட்டத்திற்கு விரோதமாக அதாவது அரசு அனுமதி இல்லாமல் யாரும் ஹஜ்ஜ் செய்ய முற்படுபட  வேண்டாம் என சவூதி  அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனெனில் மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடைபெறுவதால் அதிக அளவிலான ஹாஜிகள் கூடும் போது இடையூறு  ஏற்படும் என கருதுகின்றனர்.

இதுவரை சட்டத்திற்கு விரோதமாக மக்காவிற்குள் நுழைய முற்பட்ட 1,106 ஹாஜிகளை சிறப்பு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் 593 வாகன ஓட்டுனர்களையும், 2,296 அடையாளம் தெரியாத நபர்கள் அதாவது எந்தவித சான்றும் இல்லாதவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய்ப்f நகரிலிருந்து மலைக்குன்று வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்ற ஒரு நபர் காரில் சென்று கொண்டிருக்கும் போது மலை உச்சியிலிருந்து அவரது கார் கவிழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

போலிஸ் அதிகாரிகள் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜித்தா போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

குவைத் நாட்டை சார்ந்த ஒரு நபர் குர்பானிக்கான கூப்பன்களை விற்று வந்ததை அறிந்த போலிஸ் அவரை உடனே கைது செய்து அவரிடமிருந்த 65,000 சவூதி ரியாலை கைப்பற்றினர்.

மேலும் மக்கா நகருக்குள் யாரேனும் அல்லது எந்த கம்பனி நபர்களும் உணவு பொட்டலங்கள் கொடுத்தால அதனை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அப்படி சாப்பிட முற்ப்பட்டால் அந்த உணவு காலாவதி தேதியை பார்த்து சோதனை செய்து பின்னர்  சாப்பிடவும், சந்தேகம் படும்படி இருக்கும் நபர்களிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday 11 October 2013

ஹஜ்ஜை முன்னிட்டு, மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைய முயன்ற 55 நபர்கள் கைது



புனிதஹஜ்ஜை முன்னிட்டு ஜித்தாவிலிருந்து மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைவதை தடுக்க, அனைத்து புறவழி தடங்களிலும் அதிக அளவில் போலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜித்தா தலைமை போலிஸ் அதிகாரி Maj.Gen.Abdullah Al Qahtani கூறினார்.

மேலும் ஜித்தாவிலிருந்து 55 ற்கும் மேற்பட்ட பாலைவன தடங்கள்  உள்ளன  இதில் அல் ரேஹைலி, அபூ ஜலா மற்றும் அல் கும்ரா சாலைகளும் அடங்கும்.

இவ்வகையான அனைத்து தடங்களிலும் போலிஸ் உசார்படுத்துவதோடு திருட்டுத்தனமாக ஆட்களை ஏற்றிவரும் வாகனக்களை பறிமுதல் செய்யவும், அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஜித்தாவிலிருந்து தான் அதிக அளவில் இத்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன அதாவது அல் காக்கியா,சுஹைபா ரோடு, அல் ஜம்ஜும், ஹுதா-அல்-ஷாம் போன்ற வழித்தடங்களில் அதிக அளவிலான அதிரடி படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த வருடம் சவூதியில் வசிக்கும் நபர்கள் ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் முறையான ஹஜ்ஜ் அனுமதி (ஹஜ்ஜ் பேப்பர்) பெற்று செல்லவும்.  அனுமதி இல்லாமல் செல்பவர்களுக்கு ஒருவருட சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்யப்படும்.

இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மக்காவிற்கு நுழையமுற்ப்பட்ட 15000 ஹாஜிகள் தடுத்து திருப்பி அனுப்பபட்டனர். அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக  55 நபர்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் 12200 கார்கள் திருப்பி அனுப்பபட்டது. 

பாம்புக்கு காது உண்டா?


ஒருவருக்கு காது நன்றாக கேட்டால் அவனுக்கு "பாம்பு காது" என்று கூறுகிறோம். தமிழில் "இடியேறு நாகம் போல..." என்ற மரபு சொல்லை பயன்படுத்துகின்றோம். பாம்பாட்டியின் மகுடி இசையைக்கேட்டு பாம்பு ஆடுகிறது, அவ்வாறாயின் பாம்புக்கு  காது உண்டு தானே.. அதான் இல்லை.

தமிழ் இலக்கியங்களில் "கட்செவி" என்று பாம்புக்கு கூறப்படுகிறது. பாம்பின் கண்ணே செவியாக பயன்படுகிறது என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது அறிவியலாரின் ஆராய்ச்சிகளின்படி நீர் அலைகளுக்கு ஏற்ப ஒரு கப்பல் எப்படி அசைகின்றதோ அது போன்று தரையில் இடம்பெறும் சிறு நிகழ்வுகளும் அதிர்வலைகளாக பாம்பின் தாடையால் உணரப்படுகிறது. அது உட்செவிக்கு அனுப்பபட்டு அதன் மூலம் மூளையை சென்றடைகிறதாம் ஆகையால் அவை மண்ணுக்குள் புதைந்து கொள்ளும்போதும்  துல்லியமான ஒலி அலைகளை அவற்றால் உணரமுடியும்.

அப்படியென்றால் மகுடி இசையை கேட்க்கும் திறன் இன்றிய பாம்புகள் ஒரு தற்காப்புக்காகவே அவ்வாறு ஆடுகின்றன.

Tuesday 1 October 2013

எல்லா வகையான HP Printer க்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய


தற்பொழுது அனைத்து  அலுவலகங்களிலும் கணினி மற்றும் பிரிண்டர் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. நிறுவனத்தின் அனைத்து அறிக்கைகளையும் உடனே கொடுக்க இந்த பிரிண்டர் உதவும்.

சில நிறுவனங்களில்  அந்த கணினி மற்றும் பிரிண்டர் ரொம்ப காலமாக பயன் படுத்தி வருவார்கள். சில நேரங்களில் அந்த கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை பார்மேட் செய்து விடுவார்கள். இதனால் கணிணியிலிருந்த பழைய மென்பொருள்கள் அனைத்தும் அழிந்து விடும். இப்பொழது நமது பிரிண்டர் வேலை செய்யாது. பிரிண்டர்க்கான வன் தட்டு தேடியும் கிடைக்க வில்லை.

பிரிண்டருக்கான வன்தட்டை வைத்து தான் அந்த பிரிண்டரை இயக்கமுடியும் என்று இல்லை. இணைய இணைப்பை பயன்படுத்தி அதற்க்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து அந்த பிரிண்டரை திரும்ப இயக்கமுடியும்.

கீழ்க்கண்ட இணையதளத்திற்க்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.


கீழேயுள்ள தளத்திற்குச்சென்று

Find by product என இருக்கும் அதில் உங்களுடைய பிரிண்டரின் மாடல் எண்ணை கொடுக்கவும். பின்னர் கீழே அந்த பிரிண்டர் தொடர்பான மாடல் வரும் அதில் உங்களுடைய பிரிண்டரை தேர்வு செய்யவும்.

பின்னர் "Select your operating system" என வரும் அதில் உங்களுடைய கணினி விண்டோ எது என தேர்வு செய்யவேண்டும். உதராணமாக windows xp அல்லது windows 7 அல்லது window 8 இதில் எது உங்கள் கணினியின் செயல்பாடு என தேர்வு செய்து "NEXT" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

 இப்பொழுது கீழே பாருங்கள் "Drivers- Product installation software" என வரும் அதனை கிளிக் செய்வதன் மூலம் "DOWNLOAD" என ஒரு பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பிரிண்டருக்கான டிரைவர் மென்பொருள் கணினியில் தரவிறக்கம் ஆகும். தரவிறக்கம் ஆன உடன் உங்கள் பிரிண்டர் கேபிளை கணினியில் சொருகி RUN கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது உங்களுடைய பிரிண்டர் திறம்பட வேலை செய்யும்..




இணையதள முகவரி
http://www8.hp.com/us/en/drivers.html

Thursday 26 September 2013

ALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் செய்ய.



வளைகுடா நாடுகளில் பெரும்பாலோர் ALFA NETWORK ஐ பயன் படுத்துவார்கள். இது தங்களுடைய wifi சிக்னலை அதிகபடியாக இழுத்து உங்களது கணினியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தும்.

இந்த ALFA NETWORK பணம் கொடுத்து வாங்கி அதிலிருக்கும் வன்தட்டை (CD) தங்களது கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள்.

சில நேரங்களில் அந்த வன்தட்டை நாம் எங்கே வைத்தோம் என மறந்து இருப்போம் அல்லது தொலைத்துவிட்டிருப்போம்.

அந்த மாதிரி நேரங்களில் இந்த இனைய தளம் உங்களுக்கு கை கொடுக்கும்.

கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று கீழ்க்கண்டவாறு செய்யவும்.



Product Category: Indoor Wireless
Product Model: AWUS036H (உங்களது ALFA மாடல் நம்பரை பார்க்கவும்)
Type of File: Driver
Keyword: AWUS036H
Enter secure Code to Download: (கட்டத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்தை பார்த்து கட்டத்திற்குள் டைப் செய்யவும்.
பின்னர் Download என்பதை கிளிக் செய்தால் கீழே கண்டவாறு வரும்
அதில் Windows / Mac / Linux என இருக்கும் உங்களுடைய கணினி Windows xp அல்லது Windows 7 எனில் Windows என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த Driver உங்களுக்கு கணினியில் தரவிறக்கம் ஆகும்.


அதனை கிளிக் செய்து run என்பதை கிளிக் செய்வதன் மூலம் ALFA NETWORK Wireless வேலை செய்யும்.

குறிப்பு: ரன் செய்யும் முன்னர் உங்களது ALFA NETWORK Wireless பின்னை கணினியில் சொருகி இருக்க வேண்டும்.

அவ்வளவு தான், இனிமே உங்களது கணினியின் Wireless Signal ஐ பாருங்கள், கண்டிப்பாக அதிகமாக கூடி இருக்கும், இணைய வேகமும் முன்னை விட அதிக விரைவாக இருக்கும்..


இணைய முகவரி
http://www.alfa.com.tw/download.php


Wednesday 25 September 2013

சிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்!!



ஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.

 அதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்

அதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றும்,

இரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,

மூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...

இதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.

எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்..? அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.

அதனை விசாரித்த நீதிபதி,  அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.

மேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.

அவர் கூறியதாவது...
"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை  தான் கூறினேன்"

முதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்?"

இரண்டாவது "அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன? பெண் என்ன? " எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.

மூன்றாவதாக  "அவர்களுடைய வீட்டிற்கு திருடன்  வரவே மாட்டான்" என சொன்னேன். இதுவும் உண்மை தான்

புகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு "வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்" என திரும்பி சென்று விடுவான்.  என்றார்..


நீதிபதி:!!!!















Friday 20 September 2013

Bio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.

Bio-Data:

இது அந்த மனிதனுடைய தகவல்கள், பண்புகள், பொழுதுபோக்கு, விருப்பம் மற்றும் கல்வி தகுதியை விளக்கும்.

Resume:

இது ஓன்று அல்லது இரண்டு பக்ககங்களை கொண்டது. உங்களுடைய திறமைகள், அனுபவங்கள் மற்றும் கல்வி தகுதியை குறிக்கும்.

CV (Curriculam Vitae):

இது மிகவும் நீளமானதாகவும், அனைத்து தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கும்.  மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உண்டையதாக இருக்கும். அனுபவங்களை அதிகமான அளவில் அடங்கி இருக்கும்.

Tuesday 17 September 2013

பாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..?



இதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.

அப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்?

அதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...? அதாவது..
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்

ஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது.  அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமே... பாம்பு,  பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...?


Monday 16 September 2013

தேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை



சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.

சவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

 ஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.









Sunday 15 September 2013

பூனை குறுக்கே போனால்.......


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை  காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.

பல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..?"

"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்."

ஆவ்வ்வ் ......

Saturday 14 September 2013

டி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013



டி என் பி சி தேர்வு அறிவிப்பு 2013

மொத்த பணியிடம்: 1064
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013
தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உட்பட 1064 பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 5 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே கிளிக் பண்ணவும்
http://tnpscexams.net/tnpsc_142013/index.php

இத்தேர்வு 3 கட்டமாக நடைபெறும்.
முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு

மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்

http://www.tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf

வளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை!!


வளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு  மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா  மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.

எனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல் ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது  அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும்.  வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.

இவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.

Friday 13 September 2013

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை


இந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.

கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது
கிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது
கிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

இதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா? என தெரியவில்லை.

Wednesday 11 September 2013

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற



கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

http://eci-citizenservices.nic.in/default.aspx

அல்லது
http://www.elections.tn.gov.in/eregistration/E_Registration.aspx


இந்திய தண்டனைச் சட்டங்கள்


இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)
குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)
சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

Monday 2 September 2013

வளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்


தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு!

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.

தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)

நேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.

குற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி Hussain Ghani-Riyadh.

Sunday 1 September 2013

இந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!!


தற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி  அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து  வரும் ஹஜ்ஜ் பயணிகளை   20 % குறைத்து உள்ளது.

எனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு  வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.

புனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.  

Monday 26 August 2013

சவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்



சவூதியில் வாழும் அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள தளமாகும். ஏனெனில்  அரசாங்கம் சம்பந்தபட்ட வேலைகளை முடிக்க அதாவது தன்னுடைய இக்காமா நிலை, விசா சம்பந்தபட்ட விபரம், தன்னுடைய Exit/Re-entry பற்றிய முழு விபரம் போன்றவற்றை இங்கு அறியலாம்.

 மேலும் தன்னுடைய வாகனத்திற்கு ஏதேனும்  Traffic Rules Violate இருந்தால் அதனையும் அறியலாம். இது மட்டுமல்ல இவை சம்பந்தபட்ட வகைகளுக்கு நீங்களே ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் இருந்தால் அவர்களுக்கு தேவையான Exit/Re-entry அடிக்க ஜவசாத்  செல்ல தேவையில்லை. வீட்டிலுருந்தபடியே பணத்தை  ஆன்லைனில் செலுத்தி Exit/Re-entry அடித்துக்கொள்ளலாம்.

இன்னும் நிறைய பயன்கள் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியது....

கீழ் கண்ட லிங்கில் கிளிக் செய்யவும்.
https://www.moi.gov.sa/wps/portal/!ut/p/b1/04_SjzQ1MjAzMrU0stCP0I_KSyzLTE8syczPS8wB8aPM4k2dA5w9LXyNDd0DQs0NjNzMTbyczbzdwyxM9HOjHBUBUJSwUw!!/

 இக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and conditions-ல் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால், உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும், அந்த நம்பரை enter செய்தால்.

உங்களுக்கான Login செய்ய வேண்டிய “User Name" & "Password" என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால், நீங்கள் பிரிண்ட் செய்வதற்காக ஒரு terms & conditions னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து, அந்த printout-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தேதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்குள்  உங்களால் இந்த பகுதியில் login செய்ய முடியும்.

ஆகையால் இனிமேல் நீங்கள் ஜவசாத் செல்ல தேவை இல்லை. வீட்டிலுருந்தபடியே ஜவசாத் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.



Saturday 24 August 2013

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஆன்லைன் வசதியை பெற..


நீங்கள் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கிறீர்கள், தன்னுடைய வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல முடியவில்லைய...? நேரம் இல்லையா...? கவலையை விடுங்க,

எனது நண்பர் அமானுல்லா அவருக்காக இந்த பதிவு. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து "வெளிநாட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலம் மின்கட்டணம், எல் ஐ சி (ம) தொலைப்பேசிக் கட்டணம் போன்றவைகளை கட்ட விரும்புகிறேன், அதற்க்கு வங்கியை தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களது வங்கியின் இணையத்தளத்திற்கு சென்று பதிவு (REGISTER) செய்து அதனை பிரிண்டு எடுத்து அனுப்பிவைக்க சொன்னார்கள்" என்றார்.

சரி இப்பொழுது ஆன்லைன் மூலம் ஐ ஒ பி வங்கியில் எவ்வாறு Register செய்யலாம் என பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இணையதளம் செல்லவும்
https://www.iobnet.co.in/ibanking/indregist.do?I=I

பின்னர் நீங்களே புதியதாக  Login ID மற்றும்  Password கொடுக்கவும். கொடுக்கும்போது ஏதாவது நம்பர்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும். பின்னர் மற்ற விபரங்களை கொடுத்த பின்னர்  இறுதியாக Submit கொடுக்கவும்.இப்பொழுது பிரிண்ட் என வரும் அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு பின்னர் தங்களது வீட்டுக்கு அனுப்பி அதனை வங்கியில் சமர்பித்தால் அவர்கள் விரைவில் உங்களுக்கு Login ID (ம) Password விபரத்தை அனுப்பி வைப்பர். இப்பொழுது நீங்கள் அதை பயன்படுத்தும் போது உங்களது தொலைபேசிக்கு தகவல் வரும் (Confirm) என சில நம்பர்கள் வரும் அதனையும் பயன்படுத்தும்போது இணையவங்கி பக்கம் ஓபன் ஆகும். இப்பொழுது நீங்கள் விரும்பிய எதையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir