Monday 26 August 2013

சவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்



சவூதியில் வாழும் அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள தளமாகும். ஏனெனில்  அரசாங்கம் சம்பந்தபட்ட வேலைகளை முடிக்க அதாவது தன்னுடைய இக்காமா நிலை, விசா சம்பந்தபட்ட விபரம், தன்னுடைய Exit/Re-entry பற்றிய முழு விபரம் போன்றவற்றை இங்கு அறியலாம்.

 மேலும் தன்னுடைய வாகனத்திற்கு ஏதேனும்  Traffic Rules Violate இருந்தால் அதனையும் அறியலாம். இது மட்டுமல்ல இவை சம்பந்தபட்ட வகைகளுக்கு நீங்களே ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் இருந்தால் அவர்களுக்கு தேவையான Exit/Re-entry அடிக்க ஜவசாத்  செல்ல தேவையில்லை. வீட்டிலுருந்தபடியே பணத்தை  ஆன்லைனில் செலுத்தி Exit/Re-entry அடித்துக்கொள்ளலாம்.

இன்னும் நிறைய பயன்கள் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியது....

கீழ் கண்ட லிங்கில் கிளிக் செய்யவும்.
https://www.moi.gov.sa/wps/portal/!ut/p/b1/04_SjzQ1MjAzMrU0stCP0I_KSyzLTE8syczPS8wB8aPM4k2dA5w9LXyNDd0DQs0NjNzMTbyczbzdwyxM9HOjHBUBUJSwUw!!/

 இக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and conditions-ல் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால், உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும், அந்த நம்பரை enter செய்தால்.

உங்களுக்கான Login செய்ய வேண்டிய “User Name" & "Password" என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால், நீங்கள் பிரிண்ட் செய்வதற்காக ஒரு terms & conditions னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து, அந்த printout-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தேதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்குள்  உங்களால் இந்த பகுதியில் login செய்ய முடியும்.

ஆகையால் இனிமேல் நீங்கள் ஜவசாத் செல்ல தேவை இல்லை. வீட்டிலுருந்தபடியே ஜவசாத் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.



Saturday 24 August 2013

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஆன்லைன் வசதியை பெற..


நீங்கள் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கிறீர்கள், தன்னுடைய வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல முடியவில்லைய...? நேரம் இல்லையா...? கவலையை விடுங்க,

எனது நண்பர் அமானுல்லா அவருக்காக இந்த பதிவு. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து "வெளிநாட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலம் மின்கட்டணம், எல் ஐ சி (ம) தொலைப்பேசிக் கட்டணம் போன்றவைகளை கட்ட விரும்புகிறேன், அதற்க்கு வங்கியை தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களது வங்கியின் இணையத்தளத்திற்கு சென்று பதிவு (REGISTER) செய்து அதனை பிரிண்டு எடுத்து அனுப்பிவைக்க சொன்னார்கள்" என்றார்.

சரி இப்பொழுது ஆன்லைன் மூலம் ஐ ஒ பி வங்கியில் எவ்வாறு Register செய்யலாம் என பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இணையதளம் செல்லவும்
https://www.iobnet.co.in/ibanking/indregist.do?I=I

பின்னர் நீங்களே புதியதாக  Login ID மற்றும்  Password கொடுக்கவும். கொடுக்கும்போது ஏதாவது நம்பர்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும். பின்னர் மற்ற விபரங்களை கொடுத்த பின்னர்  இறுதியாக Submit கொடுக்கவும்.இப்பொழுது பிரிண்ட் என வரும் அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு பின்னர் தங்களது வீட்டுக்கு அனுப்பி அதனை வங்கியில் சமர்பித்தால் அவர்கள் விரைவில் உங்களுக்கு Login ID (ம) Password விபரத்தை அனுப்பி வைப்பர். இப்பொழுது நீங்கள் அதை பயன்படுத்தும் போது உங்களது தொலைபேசிக்கு தகவல் வரும் (Confirm) என சில நம்பர்கள் வரும் அதனையும் பயன்படுத்தும்போது இணையவங்கி பக்கம் ஓபன் ஆகும். இப்பொழுது நீங்கள் விரும்பிய எதையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


Friday 23 August 2013

எளிமையாக youtube வீடியோ வை தரவிறக்கம் செய்ய.


Youtube வீடியோ வை எந்த வித மென்பொருளும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் நீங்கள் விரும்பிய வகையில் விரும்பிய தரத்தில், மிகவும் உயர்ந்த  தரத்தில் (MP4, FLV,WEBM, 3GP) தரவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது.. உங்களுடைய browser ஐ அதாவது Google Chrome அல்லது Firefox அல்லது Opera இதில் ஏதாவது ஒன்றை ஓபன் செய்யவும் Firefox தான் சிறந்தது.
Firefox ஓபன் செய்யவும் பின்னர் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யது, Add to Firefox கொடுக்கவும். பின்னர் Install கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது Firefox ஐ ரீ ஸ்டார்ட் கொடுக்கவும்

https://addons.mozilla.org/en-us/firefox/addon/1-click-youtube-video-download/

இப்பொழுது யூடுப் இல்  நீங்கள் விரும்பிய வீடியோ விற்கு கீழே பாருங்கள் Download என்று ஓன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் நிறைய தர வகைகள் வரும். இங்கு நீங்கள் விரும்பிய தரத்தை தேர்வு செய்து எளிமையாக தரவிறக்கம் செய்யலாம் 

Thursday 22 August 2013

தனித்தன்மை


500 ரூபாய் நோட்டு:

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டை காட்டி  " யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

.கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?" என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .

நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க! வாழ்க்கையில் வெற்றி பெறுங்க!!

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மைகள்




உபயோகமுள்ள தகவல்கள்:

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Wednesday 21 August 2013

இந்தியரை காப்பாற்றிய சவூதி மன்னர்!!!



சாலை விபத்தொன்றில் 9 நபர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் வாடிய இந்தியர் ஒருவருக்காக சவூதி மன்னரே முன் வந்து சுமார் 6,53,000 சவூதி ரியால்கள் குருதிப்பணம் செலுத்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சலீம் பாஷா சவுதியில் கமீஸ் முசைக் எனும் நகருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஓட்டுநர் பணிக்கு வந்தார்.
கட்டுமான கற்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்த அவருடைய வாழ்வில் அந்த விபத்து ஒரு திருப்பு முனையானது.

டிராக்டர் ட்ரெய்லர் ஓட்டிய பாஷா, நெடுஞ்சாலையில் மினி வேன் ஒன்றுடன் பிப் 11, 2006 அன்று மோதியதில் எட்டு சவூதி பெண் ஆசிரியைகளும், ஒரு எகிப்திய வாகன ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாஷா மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டு பாஷா சிறை வைக்கப்பட்டார்.
திட்டமிடாமல் விபத்தாக நிகழ்ந்த மரணங்கள் என்பதால் குருதிப் பணம் கொடுத்தால் பாஷா விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
மாதச் சம்பளம் சவூதி ரியால்கள் 1,200 மட்டுமே பெற இந்தியாவிலிருந்து கடல் கடந்த பாஷாவுக்கு இது மிகவும் மாபெரும் தொகை.
என்ன செய்வது

பாஷாவுக்கு யார் உதவ முன் வருவர் என்று காலம் கழிந்து வந்த நிலையில் எதிர்பாரா திருப்பமாக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வே அந்தக் குருதிப் பணம் 6,53,000 ரியால்களையும் செலுத்தி பாஷா விடுதலை ஆக வழி கோலியுள்ளார்.
6,53,000 ரியால் என்பது இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலாகும்.

பாஷாவின் விடுதலைக்கு முயற்சி செய்த சக இந்தியரான சமூக சேவகர் அஷ்ரஃப் குட்டிச்செல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை அடைந்த பாஷா கண்ணில் நீர் மல்க தனது விடுதலைக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், உடனடியாக மக்கா சென்று உம்ராஹ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றி தனது விடுதலைக்கு உதவிய மன்னருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டுள்ளார்.
விபத்து நடந்தால் தப்பி ஓடாமலும், உண்மையை ஒப்புக்கொள்வதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாமலிருப்பதும் குருதிப் பணம் தந்து விடுதலைப்பெற வழி வகுக்கும் என்றார் சலீம் பாஷா.

நன்றி. kadayanallur.org

குளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம்


சென்னையை சேர்ந்த ஒருவர் பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார் அப்போது அந்த பாட்டில் தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது.

கடைகாரர் பாட்டிலுக்கு காசு கேட்க்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமருக்க இருவருக்கும் இடையில் கலட்டாவாகி போலிஸ் வரை போய் பிரச்சனை கோர்ட் க்கு போனது..

கடைகாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் " ஹோட்டலில் காசு கொடுத்து தான் சாப்பிடுகிறோம் அதற்க்காக அங்கு உணவு பரிமாறப்படும் தட்டு,கிண்ணம்,தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டு வந்து விட  முடியுமா...அதுபோல தான் குளிர்பானம் வாங்கினால் பாட்டிலை கொண்டு போக முடியாது " என வாதிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா... அவரும் அசராமல் திருப்பி அடித்தார் "ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு ஐட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருள்) அல்ல.

ஆனால் குளிர்பானம் என்பது பேக்டு ஐட்டம். இது போன்று பேக்டு ஐட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும்  சேர்த்து தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் சாப்பிலுருந்து ஒயின் சாப் வரை பாட்டிலில் வாங்கபடும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன" என வாதிட்டார்.

ஏறத்தாழ  ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில் " குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம்" என தீர்ப்பு வந்தது.

Monday 19 August 2013

வாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி சேவை அமெரிக்கா நம்பருடன்


24 மணி நேரம் பேசனும், வருஷம் பூரா பேசனும்னு ஆர்யா ஒரு படத்தில சொல்வாரு, அதுக்கு சந்தானம் அப்ப நேராதான் பேசனும்னு சொல்றது இப்போ பொய் ஆகி போச்சு. இன்னைக்கு ஒரு சூப்பர் ஆப்பை பற்றி கூறப்போகிறேன். இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ட்ராயிட் ஃபோன் வச்சிருக்கவங்களுக்கு வரப்பிரசாதம். லைன் 2 என்னும் ஆப்ஸை இறக்குமதி செய்யுங்க. அதில் ஒரு டெலிஃபோன் நம்பர் தருவாங்க அமெரிக்கா நம்பர். இதுக்கு தேவை போஸ்ட்கோடு என்னும் அமெரிக்க பின்கோடு மற்றும் மின்னஞ்சல் முகவரி. போஸ்ட்கோடு எப்படி கிடைக்கும்னு கேக்குரவங்களுக்கு ஒரு க்ளூ கூகுள் பன்னுங்க ஏதாவது ஒரு அமெரிக்க கம்பேனி அல்லது அட்ர்ஸோட பின்கோடை போட்டா அந்த ஏரியால இருந்து மூனு நம்பர் கிடைக்கும் அதுல ஒன்னை செலக்ட் செய்தா ஒரு பைசா இல்லாம வாழ்க்கை முழுவது இலவச டெலிஃபோன் மற்றூம் இதை இந்தியாவுல அல்லது உலகத்துல எந்த மூலையில் உள்ள ஆட்களுக்கு இலவசமா - வைஃபை அல்லது 3ஜி அல்லது 2ஜி இன்டர் நெட் இருந்தா போது பேசலாம் ஐ எஸ் டி தேவையில்லை. வைபர், ஸ்கைப் இதெல்லாம் இருக்கே இது எதுக்குனு கேக்குறவங்களுக்கு இதில் மட்டும் தான் டெலிஃபோன் நம்பர் உங்களுக்குனு தனியா தராங்க,அதனால் உங்க ஒரிஜினல் நம்பர் தர விருப்பம் இல்லாத நேரத்தில இந்த நம்பரை கொடுக்கலாம். அது போக ஒரே ஃபோன் இரண்டு நம்பர்.

இதுல முக்கிய விஷயம் இதை டவுன்லோட் பண்ணீனவங்க கிட்ட டெலிஃபோன் நம்பரை தெரிஞ்சி கொன்டு இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அது போக நீங்க வெளியே இருந்து எந்த பப்ளிக் பூத்ல இருந்தும் நம்பர் தெரிஞ்சா ஃபோன் பன்னலாம். அது போக அமெரிக்கா கனடா நாடுகளுக்கு டோல்ஃப்ரி நம்பரை ஃப்ரீயா பேசி உங்க வியாபார நட்பை வளர்த்து கொள்ளலாம். இந்த நம்பர்ல இன்னொரு ஆஃபர் இருக்கு அதாவது 9.99 டாலர் மாசம் (ரூபாய் 550) கட்டினா அமெரிக்கா, கனடா நாட்டின் எந்த ஒரு நம்பருக்கும் இந்த ஆப்ஸ் இல்லாதவங்களுக்கு இலவசமா பேசலாம், எஸ் எம் எஸ் , வாய்ஸ் மெயில், கால் ஃபார்வர்டிங்கும் இலவசம். சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஸ்டம்.

முக்கிய விஷயம் செல்ஃபோன் இல்லாதவங்க கூட ஐ பேட் அல்லது டேப்ளட் வச்சிருக்கவங்க கூட தொலைப்பேசியா உபயோகிக்கலாம்

"மேலே இடது பக்கக்த்து படத்தில் உள்ளது எனது லைன் 2 தொலைப்பேசி நம்பர்"

இதை ஆப்பிள் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -

இதை ஆன்ட்ராயிட் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -

Sunday 18 August 2013

பேஸ்ட் வாங்கும்போது கலர பார்த்து வாங்குங்க


கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை, ப்ளூ, சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

இனிமே டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு பார்ப்பிங்க..............?

வங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது


வங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது..?

வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்றை மாதாந்திர தவணையில் திருப்பி செலுத்த வேண்டும். கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படும் தொகை தான் மாதாந்திர கட்டணமாக செலுத்தச் சொல்கிறார்கள். இதைத் தான் இ.எம்.ஐ (EMI) அல்லது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை என்பர். சரி, ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம். அவர்கள் ஒரு மாதாந்திர தவணைத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். அந்த தொகை எப்படி வந்தது, எப்படி கணக்கிடப்படுகிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

EMI
எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
கடன் தொகை மற்றும் வட்டி தொகை கலந்து இருப்பது தான் மாதாந்திர தவணைத் தொகை. கடன் பெற்ற ஆரம்பத்தில் வட்டித் தொகை அதிகமாகவும், கடன் தொகை குறைவாகவும் கலந்து இருக்கும். மாதாந்திர தவணையை கணக்கிடும் முறையை இங்கே பார்ப்போம். மிகவும் எளிதான ஒரு கணக்கு தான்.

இ.எம்.ஐ = ( (கடன் தொகை X வட்டி) X (1+வட்டி) ^ மாதங்கள் )
----------------------------------------------------------------------------------------------
( (1+
வட்டி)^ மாதங்கள் - 1 )

உதாரணமாக, நாம் பத்து லட்சம் ரூபாய், 11% வட்டி விகிதத்தில், 15 வருட கடன் காலத்துக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

கடன் தொகை = 10,00,000

வருட வட்டி விகிதம் = 11%
அப்போ ஒரு மாத வட்டி விகிதம் = 11/12 % =0.0091 %

ஆக மாத வட்டி = 0.91667%
விகிதத்தை(%) நீக்க 100 ஆல் வகுக்கவும்

ஆக மாத வட்டி = 0.91667 / 100 =0.0092

கடன் காலம் = 15 வருடம்
மாதக் கணக்கில் = 15 x 12 = 180 மாதங்கள்

சரி..இப்போது நம் ஃபார்முலா படி மாதாந்திர தவணையை கணக்கிடுவோம்.

இ.எம்.ஐ = (10,00,000 X 0.0091667) x (1+0.0091667) ^ 180
----------------------------------------------------
( (1+0.0091667) ^ 180- 1 )

= 9166.667 x 5.16829
------------------------
4.16823

= 47375.99
-----------
4.16823

இ.எம்.ஐ = 11,365.97

மாதாந்திர தவணை = ரூ. 11,365.97

நிரந்தர வட்டி விகிதம், ப்ளோட்டிங் வட்டி விகிதம் என வட்டி விகிதங்கள் இரண்டு வகைப்படும்.

நிரந்த வட்டி விகிதம்:
கடன் காலம் முழுவதும் ஒரு வட்டி நிர்ணையித்து, அதற்கேற்றார் போல மாதாந்திர தவணை கணக்கு செய்யப்படும். வட்டி விகிதம் மாறாத காரணத்தால் மாதாந்திர தவணையும் மாறாமல் இருப்பது தான் நிரந்தர வட்டி விகிதம். இனிவரும் காலங்களில் வட்டி விகிதம், இப்போது இருப்பதை விட உயரத்தான் செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நிரந்தர வட்டி விகிதத்திற்கு செல்வார்கள்.

ப்ளோட்டிங் வட்டி விகிதம்:
சந்தைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதற்கேற்ப ஆர்.பி.ஐ வட்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறும். இதனால், நாம் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணையோ அல்லது கடன் செலுத்தும் காலமோ மாறலாம். இதனைத் தான் ப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பர்.

தேவையறிந்து கணக்கிட்டு, நமக்கு ஏற்ற மாதாந்திர தவணையை முடிவு செய்த பிறகு, கடன் வாங்குவது அனைவருக்கும் நல்லது!


Saturday 17 August 2013

ஆதார் அட்டை வாங்கவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ 891.50


AADHAR Card is must to get LPG Subsidy - "ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891.50 -

ஆதார் அட்டை இல்லையெனில் உங்களின் கேஸ் 891.50. ஆதார் அட்டை இருந்தால் இதில் ரூபாய் 511 அரசாங்கம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தும். இது அக்டோபர் மாதத்திற்க்குள் கார்டு வாங்க வேண்டும். கார்டு இலவசம். கார்டு அப்ளை பண்ணும் போது உங்களுடைய வங்கி கணக்கை மறக்காமல் சேர்த்து விடுங்கள் அது போக இந்த கார்டு எங்கெல்லாம் பதியலாம் என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......... ஓராண்டிற்கு மானிய விலையில், 9 சமையல் எரிவாயு உருளைகளை வழங்குகிறது.
அமெரிக்காவுல இருந்துகிட்டு எங்களுக்கு எப்படி ஆதார் கார்டுன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை....ஹிஹிஹி
மேலும் விபரம் அறிய கீழ உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்
http://uidai.gov.in/aadhaar.html

கேம்பஸ் இண்டர்வியூ பற்றிய சில உண்மைகள்! எச்சரிக்கைகள்!!


கேம்பஸ் இன்டர்வியூ: சில உண்மைகள்... சில எச்சரிக்கைகள்..!

‘கேம்பஸ் இன்டர்வியூ’ - இன்றைய சூழலில் ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது இந்த மந்திரச் சொல்தான். மாணவர்களுக்கு மட்டுமல்ல... கல்லூரிகளுக்கும் மாணவர்களைக் கவர அதுதான் தூண்டில் முள்!

'எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தித்தான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைச் சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே பணி நியமனத்துக்கான அப்பாயின்மென்ட் ஆர்ட ரைக் கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத் தில் மாணவர்களும் பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்தச் செய்தி.

'கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றும் ஆண்டுக்கணக்கில் பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்.’

சென்னை தவிர... பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ''அப்பாயின்மென்ட் ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடிய வில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்'' என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. கேம்பஸ் இன்டர்வியூ என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்கத் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிப வரும், 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

''கேம்பஸ் இன்டர்வியூ என்பது ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்யும் சேவை போன்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், வளாக நேர்முகத் தேர்வு மூலம் நிறுவனங்களுக்குத் தான் லாபம் அதிகம். அவர்கள் தங்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு (DOTE -Directorate Of Technical Education). டோட்-1 என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். டோட்-2 என்பவை தனியாரால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள். பன்னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் பிரியப்பட்டு ஆர்வமுடன் வருவது டோட்- 1 கல்லூரிகளுக்குத்தான். டோட்- 2 கல்லூரிகளுக்கு கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு நிறுவ னங்களை அழைத்து வர வேண்டும். இந்த டோட்-2 கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்வா கும் மாணவர்களுக்குத்தான் தற்போது சிக்கல்!

டோட்-2 கல்லூரி மாணவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருப்பார்கள். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துக்களை விற்றுப் படிக்கவைக்கப்படுபவர்கள். இவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும், நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைக்கழிப்பது ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். 'எங்களிடம் 2 லட்சம் ஊழியர் கள் இருக்கிறார்கள்... 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டித்தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லா யிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலை, ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி எனப் பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்ட்கள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், மூத்த ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர் களை வேலைக்கு எடுப்பதைத் தள்ளிப் போடு கின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் முதலில் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இறுதியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முதல் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகரங்களை ஒதுக்குகின்றனர் என எளிமையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதி மூலம்!'' என்கிறார் செந்தில்.

ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மட்டும் இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 6,000 பேர் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் அமர்த்தப்படாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க ஃபேஸ்புக்கில் 'நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அந்தக் குழுவைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது...

''ஒருமுறை கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால், கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால், திறமை காரணமாக முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க... அதன் பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாகக் காத்திருக்கிறார்கள். வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் 'நீங்க ஃப்ரெஷ்ஷரா அல்லது அனுபவசாலியா?’ என்று கேட்பார் கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை. வேலையில் சேர்ந்துவிடலாம். 'வேலைக்காக வெட்டியாகக் காத்திருந்தேன்’ என்று சொன்னால், எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை மறை முகமாகச் சிதைக்கும் போக்கு இது!'' என்று கேம்பஸ் இன்டர்வியூவின் அதிர்ச்சியான மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார் சுதிர்.

எனில், இதில் கல்லூரிகளின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அது கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம்தானே! அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம் தானே என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தம் என்னவெனில், கல்லூரிகளே நிறுவனங்களை கெஞ்சிக் கூத்தாடித்தான் கேம்பஸ் இன்டர்வியூ வுக்கு அழைத்துவருகின்றன. ஆகவே, 'எங்கள் மாணவர்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால், அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார் கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றிக் கண்டுகொள்வது இல்லை. ஆனால், எந்தக் கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 'எங்கள் கல்லூரி யில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

உங்க செருப்பின் அளவை வைத்தே உங்க வயதை கண்டுபிடித்துவிடலாம்


1) உங்க செருப்பின் அளவை எடுத்துக்கொள்ளவும்.
2) அதை 5 ஆல் பெருக்கவும்.
3) அதனுடன் 50 ஐ கூட்டவும்.
4) பின்னர் 20 ஆல் பெருக்கவும்.
5) அதனுடன் 1012 கூட்டவும்.
6) பிறகு வந்த விடையுடன் உங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்.

இப்பொழுது வந்த விடையில் கடைசி இரண்டு இலக்கம் உங்கள் வயது, முதல் இலக்கம் உங்கள் செருப்பின் அளவு...

எப்பூ...டி .......................

Friday 16 August 2013

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.


மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

காபி கோப்பை


ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.

ஆனால் உங்களது இப்போதைய தேவை காபி கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காபியைத்தான்.

நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் (வாழ்கையின்) உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''

Thursday 15 August 2013

துளையிட்ட காசு





அதிர்ஷடம்:

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.

ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடு­வேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, ­ அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் ­ போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.

அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது ­. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ ­ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

உளவியல் சொல்லும் உண்மைகள்

உளவியல் சொல்லும் உண்மைகள்:

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

வாழ்கையில் பல வழிகள்


பாரசீக மன்னன்,  சுல்தான் இருவருக்கு மரண தண்டனை கொடுத்தான். அதில் ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.   “அரசே! எனக்கு ஒரு வருடம் தவணை கொடுத்தால் உங்கள் குதிரையை பறக்க வைப்பேன். உலகிலேயே பறக்கும் குதிரை ராஜா என்ற சிறப்பு பெயர் உலகில் உங்களுக்கே”  என்றான். அரசனுக்கு மனதிற்குள் ஆசை கிளம்பியது. அதற்கு ஒப்புக் கொண்டான்.

இதைப் பார்த்த இரண்டாம் கைதி அவனிடம் “ஏண்டா, ஒரு வருடத்தில் எப்படி உன்னால் குதிரையைப் பறக்க வைக்க முடியும்?” . என்றான். அதற்கு அவன், “அடுத்த ஒரு வருடத்தில் அரசனின் மனம் மாறலாம். அல்லது அரசன் இறக்கலாம். அல்லது குதிரை இறக்கலாம். அல்லது ஒருவேளை குதிரைக்கே பறக்கும் நிலைமை ஏற்படலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?” என்றான்.
தற்கொலை செய்வோரை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு (பணம், காதல், தொழில்) அதனோடு உணர்ச்சிப்பூர்வமாக  சிக்கிக் கொண்டு அதில் நினைத்தபடி நடக்காத போது எல்லாமே போய் விட்டது என்று முடங்கி, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கின்ற முடிவின் விளைவு என்பதுதான்.

வாழ்க்கையில் சரியாக நடப்பது ஒரு அம்சம். எதிர்பாராதபடி நடப்பது மற்றொரு அம்சம். இந்த இரண்டாவதில் தான் அனுபவம் என்ற மிகப்பெரிய விஷயம் கிடைக்கும். அதைப் பெறுவது தோல்விகளில்தான். வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களை கொடுத்து உயரச் செய்வதே இந்த அனுபவங்கள். ஒரு வழி சரியில்லையா? இரண்டாவது வழி. அது சரியில்லையா? மூன்றாவது வழி? அதுவும் சரியில்லையா? நான்காவது வழி, வாழ்க்கையில் இப்படி பல வாய்ப்புகள். ஒரே கதவை பிடித்து தட்டிக் கொண்டு திறக்கவில்லையே என முட்டிக் கொள்ளத் தேவையில்லை.

மனச்சுமையை நீக்க

ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?” என்று கேட்டார்.

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....”

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”

“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

”ஒன்றும் ஆகாது”  மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

”தாங்க முடியாத வலி ஏற்படும்”,  “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”,  “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்”
என்று பதில்கள் வந்தன.

”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”

”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

Tuesday 13 August 2013

ஏழ மணி நேரத்தில் பிரிட்டன் விசா சூப்பர் பிரையரிட்டி விசா அறிமுகம்


பொதுவாக பிரிட்டனுக்கு செல்ல விசா கொஞ்சம் காலமாக தாமதமாகிதான் வந்தது. ஏன் என்றால் பிரிட்டனில் இப்போதும் கை ரேகை எனப்படும் பயோமெட்ரிக்ஸ் பிராசஸ் மற்றும் வி எஃப் எஸ் மூலம் என்பதால்தான் மிக தாமதம் ஆகி வந்தது.. இதனால் சில அப்ளிகேஷன்கள் 15 நாள் முதல் 60 நாள் வரை டிலே ஆயிற்று.. இதனை கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் – சூப்பர் பிரயாரிட்டி விசா என்னும் 7 மணி நேரத்தில் விசா கிடைக்கும்படி செய்திருக்கின்றனர்.

இது உலகத்தில் முதன் முதலாக இந்தியர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அது போக உலகின் எந்த ஒரு எம்பஸியிலும் இதை பெற்று கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் காலை 9:30 மணிக்குள் ஆன்லைன் மூலம் அப்ளிகேஷன் ஃபில் செய்து சப்மிட் செய்தால் மாலை 5 – 6 மணிக்குள் தகவல் வரும்- உங்கள் விசா ரெடி வந்து பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டிகொள்ளுங்கள் என்று.

இதற்கு – கடந்த 2 ஆண்டுகள் யூகே / அமெரிக்கா / ஆஸ்திரேலியா / நியூசிலேன்ட் / செங்கன் நாடுகள் அல்லது கனடா போயிருந்தால் கண்டிப்பாக விசா உறுதி. அது போக இதற்க்கு 600 பவுண்டுகள் அதிகம் செலவாகும் என எதிர்பார்க்க படுகிறது.

வெளி நாடு செல்லும் முன், வெளிநாட்டு தூதரகத்தில் நமது சான்றிதழ்களை எப்படி அட்டேஸ்டேசன் பெறுவது என்பதை அறிவோம்.



வெளி நாடு செல்லும் முன் சன்றிதல்களில்  எச் ஆர் டி(Human Resource Development), எம் இ ஏ (Ministry of External Affairs)தூதரக அனுமதி பெறுவது எப்படி என பார்ப்போம்:

செல்ல வேண்டிய இடம்:
பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)

தேவையான டாகுமெண்டுகள்:
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல் 
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Ministry of External Affairs of the Government of India 
Joint Secretary (Consular), MEA 
CPV Division, Patiala House Annexe 
Tilak Marg, New Delhi. 
Tel.: +91 11 2338 8015 
Fax.: +91 11 2338 8385 
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in

And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs 
Branch Secretariat 
2 Ballygunge Park Road 
Kolkata – 700019 
Tel: 033-22879701 / 22802686 
Fax: 033-22879703 
————–
Ministry of External Affairs 
Branch Secretariat 
7th Foor EVK Sampath Maligai 
68 College Road 
Chennai – 600006 
Tel: 044-28272200 / 28251323 
Fax:044-28251034 
—————-
Ministry of External Affairs 
Branch Secretariat 
B Block Room #311-312 
Hyderabad – 500022 
Tel: 040-23456051 
Fax:040-23451244


படிக்க நேரம் இருப்பவர்கள் படிக்கவும்:
நண்பர்களின் உதவியுடன் அட்டெஸ்டேசன் என்றால் என்ன? எங்கு பெறுவது என தெரிந்து கொண்டு யூரோ டிராவல்ஸை அணுகினார் ஒருவர்.அவர்கள் மேற்கூறிய மூன்று இடங்களிலும் அட்டெஸ்டேஎசன் பெற்றுத் தர ரூபாய் 10000 வரை செலவாகும் எனவும் எம்‌இ‌ஏ மற்றும் தூதரக அட்டெஸ்டேசனுக்கு ரூ 5000 வரை ஆகும் எனவும் கூறினர்.மனம் தளராமல் அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு சென்னை கிளம்பினார் .போக ஆன செலவு ரூ 340 (சொகுசு பேருந்து தாராபுரத்திலிருந்து).காலை 6 மணிக்கு கிண்டியிலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு(பேருந்து கட்டணம் 15) போனார்  அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.மூன்று வாயில்களிலும் அங்கிருந்து இங்கே போ அங்கே போ எனக் கூறி தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்ற வைத்துவிட்டு இறுதியில் ஒரு நல்ல? இன்ஸ்பெக்டர் இன்னும் எச்‌ஆர்‌டி அலுவலகம் பழைய தலைமைச் செயலகத்தில்தான் உள்ளாது என்பதை கூறினார்.பிறகு அங்கிருந்து பேருந்து எதுவும் கிட்டாததால் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து பழைய தலைமைச் செயலகம் சென்றார்.அங்கு காலை 10 மணி அளவில் பொது வழி வழியாக முகவரியப் பதிந்த பின்னர் நேரே உள்ளே நாமக்கல் கவிஞர் மாளிகை பின்புறமுள்ள கட்டிடத்தின் ந்ழைவாயில் அருகே அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் அனுமதிச் சீட்டு பெற்று நேரே ஹெச் ஆர் டி டிபார்ட்மெண்ட் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து ஒரு ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் தலையை ஒட்டி அவரது பட்டப் படிப்புச் சான்றிதழ்(உண்மை) மற்றும் அதன் இரு நகல்கள்,வெளிநாட்டில் பெற்ற வேலைக்கான உத்தரவு(ஜாப் ஆஃபர் லெட்டர்)ஒரு நகல்,அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பிறகு விண்ணப்பபடிவத்தின் ஒரு நகல் மற்றும் உண்மை,பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களீன் ஒரு நகல் ஆகியவற்றோடு இணைத்து அதிகாரியிடம் அளித்தவுடன் அவர் பெற்றுக் கொண்டதன் அடையாளமாக விண்ணப்பத்தின் நகலில் சீல் வைத்து ரெபரன்ஸ் எணையும் எழுதிக் கொடுத்து விட்டு ,அண்ணா பல்கலை கழகத்தின் சான்றிதழ் அட்டெஸ்டேசன் தொகையை அண்ணா பல்கலையில் கட்டிவிடுமாறு கூறினார்.பிறகு வெளியே வந்து விண்ணப்பப் படிவத்தை எதற்கும் இருக்கட்டும் என இரு நகலெடுத்துக் கொண்டு பேருந்து பிடித்து அண்ண பல்கலை (கட்டணம் ரூ 07 பே எண் பி22பி) கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேசன் அலுவலகம் சென்றால் அங்கு ரிசப்சனில் உள்ள பெண் ரூ 500 க்கான டிடியும் விண்ணப்பத்தின் நகலையும் கொண்டுவருமாறு கூறினார்.பக்கத்து வளாகத்திலேயே இந்தியன் வங்கி இருந்ததால் பிரச்சினை இல்லை டிடி எடுத்து கொடுத்து முடிக்கும் போது மணி பகல் ஒரு மணி.ஆன செலவு பேருந்து, குளிக்க (மெட்ரோ பேலஸ் விடுதி மன்னடி ரூ 100) ,சாப்பிட, டிடி எல்லாம் சேர்த்து ரூ 1500க்குள் அடங்கியது.இன்னும் 15 நாளில் கிடைத்துவிடும் .கிடைத்ததும் நேரே டெல்லி சென்றுவிட வேண்டியத்தான்.
சரியாக பதிமூன்று நாட்களில் எனது அட்டெஸ்டேசனை தலைமைச் செயலகம் முடித்துவிட்டது.இதனை 044-25670324 என்ற எண்ணில் அழைத்தும் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு டோட் பில்டிங் (சாஸ்திரி பவன் அருகில்)எழாவது மாடியில் எம் ஈ ஏ அலுவலகம் உள்ளது.அங்கு 12.30 மணி வரை மட்டுமே சர்டிஃபிகேட் வாங்குகிறார்கள்.பிறகு மாலை 5 மணி அளவில் திருப்பி தருகிறார்கள்.அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை உங்களது சான்றிதழின் பின்புறம் 11*13 செ.மீ இடம் வேண்டும்.உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தர அலைந்து திரிந்து ஒரு இடத்தை கண்டுபிடித்தேன்.
அவரது முகவரி இதோ உங்களுக்காக:
ராஜேந்திரன்
பழைய எண் 15,புதிய எண் 37 ,ராமேஸ்வரம் ரோடு,
இரண்டாவது மாடி(சத்யா பஜார் அருகில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிர்புறம்) தி.நகர்,சென்னை-17 செல்:9941342439

எம் ஈ ஏ தேவையான சான்றிதழ்கள்:
1.சான்றிதழ் ,அதன் நகல்(தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)
2.பாஸ்போர்ட் நகல்
குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர்.முக்கியமாக மும்பை தூதரகத்தின் முன் இவர்கள் அதிகம் சுற்றித் திரிகிறார்கள்.கவனம்.மேலும் யாருக்கும் எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.


ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் இந்தியா: +91-9943826447, 
+919787097448 சிங்கப்பூர்: +6590971917
பாரின் ஜாப் பேங்க்
4th floor, D.No: 127,
150,Cisons Complex,
Montieth Road,
Egmore Chennai-600 008.


வெற்றிக்கு வழி

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

Monday 12 August 2013

U.P.S.C Examination Scheduled Notification 2014

Union Public Service Commission
Program Of Examinations/ RECTT Test-2014





Sunday 11 August 2013

டி.என்.பி.சி குரூப் 8 தேர்வு 2013

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிர்வாக அதிகாரி (கிரேடு3) பணிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. இது ‘குரூப்–7 பி’ தேர்வின் கீழ் நிரப்பப்படும் பணியிடங்களாகும். மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வயது வரம்பு: 25 முதல் 35 வரை 
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு 
விண்ணப்பக்கட்டணம்: ரூ 50/-
தேர்வுக்கட்டணம்: ரூ 100/-
எழுத்துத்தேர்வு : 19.10.2013
கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20.08.2013

 ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிய பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் 16–8–13 தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விபரம் அறிய கீழேயுள்ள தளத்தை சொடக்க்கவும்
http://www.tnpscexams.net/

முக்கிய தேர்வு தேதிகள்

வேலை வாய்ப்பு மலர் ( From ஆகஸ்ட் 05,2013 To ஆகஸ்ட் 11,2013 )

முக்கிய தேர்வுகள் - கடைசி தேதி - தேர்வு தேதி

1) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - ஆக., 17
2) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 - ஆக., 18
3) ரெப்கோ வங்கி கிளர்க் - ஆக., 18
4) டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - ஆக., 25
5) உளவுத்துறை (இன்டலிஜன்ஸ் பீரோ) - ஆக., 12 - செப்., 15
6) ஐ.பி.பி.எஸ்., பிரபஷனரி ஆபிசர்ஸ் - ஆக., 12 - அக்., 19, 20 , 26
7) ஐ.பி.பி.எஸ்., (ஆர்.ஆர்.பி.,) அலுவலக உதவியாளர் - செப்., 28/29 - அக்., 5/6
8) நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் (நிர்வாக அதிகாரி) - செப்., 8
9) எஸ்.எஸ்.சி., (கிளர்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) - ஆக., 16 - நவ., 10, 17

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2013

என்ஜினீயரிங் இறுதியாண்டு படிப்பவர்களுக்கு சிறப்பு ஆட்சேர்ப்புக்கான தேர்வு அறிவிப்பு இந்திய ராணுவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 -24 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: என்ஜினீயரிங், பி.டெக்  இறுதியாண்டு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2013

மேலும் விபரங்கள் அறிய கீழேயுள்ள தளத்தை சொடக்கவும்
http://joinindianarmy.nic.in/

நெட்(NET EXAM) தேர்வு 2013 அறிவிப்பு


நெட் தேர்வு 2013 அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தேதி: 
30.07.2013  முதல் 22.08.2013 வரை  ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
தேர்வு நாள்: 22.12.2013.

விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவு: ரூ 400/-
ஓ பி சி : ரூ 200/-
ஊனமுற்றோர்கள்: ரூ 100/-

மேலும் விபரம் அறிய கீழ உள்ள தளத்தை சொடக்கவும்.







கண் பரிசோதனைக்கென ஒரு இணையதளம்


கம்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்தாலோ அல்லது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தாலோ , புத்தகங்களை அதிகமாக படித்தாலோ  நம் பார்வை நமக்கேத் தெரியாமலே டல்லாகி இருக்கலாம்.

அதை கண்டறிய ஐ ஸ்பெஷலிஸ்டை நாடிப் போக பலருக்கு நேரமிருக்காது.
அவர்களுக்கு உதவவே ஒரு வெப்சைட் இருக்கிறது.
இந்த வெப்சைட்டில் இருக்கும் நிறச் சோதனை, இணைய வழி எழுத்துச் சோதனை, சுய வழி திரையிடல் சோதனை, பார்வைக்குரிய மாயை போன்ற நான்கு சோதனைகள் தரப்பட்டிருக்கின்றன.

இந்த டெஸ்ட்டுகள் முழுமையாகச் செய்து பார்த்த பின்பு நம் பார்வை குறித்த பல விவரங்கள் தரப்படுகின்றன.
அதைக் கொண்டு நம் கண்பார்வை சரியாக உள்ளதா? அல்லது சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

என்ன உங்கள் பார்வைக் குறைகளைக் கண்டறிய தயாரா…
இணையதள முகவரி:
http://www.freevisiontest.com/intro.php

Saturday 10 August 2013

பி எப் கணக்கை கணினி மூலம் சமர்பிக்க வசதி (ம) தங்களது பி எப் இருப்பு பற்றி அறிய.


வருங்கால வைப்புநிதி ஆணையம் தொழிலாளர்களுக்கு தங்களது உறுபினர்களின் கணக்கு எண் மாற்றும் (நமனா-13) படிவங்களை கணினி மூலம் சர்பிக்கும் முறையை விரைவில் கொண்டுவர உள்ளது. அதன் படி அனைத்து தொழில் அதிபர்களும் தங்களது தொழிலாளர்களின் கணக்கு எண் மாற்றும் படிவங்களை கணினி மூலமாக சமர்பிக்க அங்கீகரிக்கபட்ட நபரின் கையொப்பங்களை கணினி முறையாக்கி ஆவணபடுத்தபடுள்ளது

எனவே தாம்பரத்துக்கு உட்பட்ட நிறுவனங்களின்    தொழில் அதிபர்கள் தங்களது கையொப்பங்களை கணினி முறையாக்கி (கிளாஸ்-2 மற்றும் 3)  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (http://www.epfindia.com/employer_OTCP.html)
வலைதளத்தில் உள்ள கணக்கு எண் மாற்றும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள தொடர்பு அலுவலர், தாம்பரம் (தொலைபேசி எண் 044-22 265332 / 9444046542) என்ற எங்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.epfindia.com/index.html என்ற வலைத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 1800 118 005 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பி எப் பிடித்தம் உடைய தொழிலாளிகள் தங்களது பி எப் கணக்கின் இருப்புகளை அவ்வப்போது  தெரிந்துகொள்ளலாம். கீழ்க்கண்ட இணையத்தளத்திற்கு சென்று முதலில் மாநிலத்தை தேர்வு செய்யவும், பின்னர் மாவட்டத்தை தேர்வு செய்யவும். இறுதியில் உங்களது கைபேசி எண் கொடுத்தால் உங்களது  கைபேசிக்கே உங்களது பி எப் கணக்கின் இருப்பு பற்றிய விபரம் வரும்.
http://epfoservices.in/epfo/member_balance/member_balance.php?officename=VElSVU5FTFZFTEk=


 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir