Tuesday 11 November 2014

Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்



 Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள்  உபயோகிப்பதால்  ஏற்படும் தீமைகள்:

இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில் whisper, stayfree போன்ற  நாப்கின் களை உபயோகின்றனர். இதனால் சவுகரியமாகவும், பயன் படுத்துவதும் மிக எளிது மற்றும் பாதுகாப்பானது என்று எண்ணியே இதனை உபயோகின்றனர். எனினும் இந்த அல்ட்ரா நாப்கின்களில் ஒருவகையான கெமிக்கல் பயன் படுத்தி தயாரிக்கின்றனர். அந்த கெமிக்கல் பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தை ஜெல் நிலைக்கு மாற்றுகிறது. இதனால் பெண்களுக்கு சில வகையான கேடுகளை விளைவிக்கவும் செய்கிறது. அதாவது நாப்கினை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் உருவாக காரணமாகி விடுகிறது. அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தும் பெண்கள் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

அதனை அதிக நேரம் பயன்படுத்துவதால் இரத்தம் பச்சை நிறத்திற்கு மாறுவதுடன் பாக்ட்ரியா தொழிற்பாடு அந்த ஜெல்லில் ஏற்பட்டு உடலுக்கு உள்ளே செல்கிறது.

எனவே அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தாமல் காட்டன் பேடுகளை பயன் படுத்தலாம். இதனை விட சிறந்தது தங்களிடமுள்ள காட்டன் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் உலறிய பின்னர் அதனை பயன்படுத்தலாம்.

ஏனெனில் நாம் வாங்கும் புதிய துணிமணிகளை கூட அப்படியே உபயோகிக்காமல் அதனை துவைத்து பின்னர் அணிய வேண்டும் இல்லை எனில் அந்த துணியிலுள்ள கெமிக்கல் கலவை நமக்கு தோல் சம்பந்தமான சில வியாதிகளை கொண்டு வரும். அதனை துவைக்கும் போது அதிலுள்ள இரசாயானங்கள் வெளியேறி விடும்.

Wednesday 24 September 2014

Nitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய

Nitaqat System முறையில்  நம்முடைய கம்பனியின் நிலையை (என்ன கலர்) எவ்வாறு ஆன்லைனில் பரிசோதிப்பது என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவருக்கு அந்த இணைய முகவரியை கொடுத்தேன் அதற்க்கு அவர் அது முழுவதும் அரபியில் உள்ளது, எவ்வாறு பார்ப்பது? என்றார்.அவருக்காக இந்த பதிவு.
 
முதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்

இணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்

கீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.





எப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.






Nitaqat System பற்றிய சிறு விளக்கம்:
Nitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும்  பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.

இந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.

இவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.



இவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது  ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.





Saturday 6 September 2014

சவூதி அரசு அமைத்துள்ள குறைந்த கட்டண ஹஜ்ஜ் சேவை:



சவூதி நாட்டினர் மற்றும் அங்கு பணிபுரியும் வெளி நாட்டினர் இவ்வருடம் எளிதாக ஹஜ்ஜ் செய்ய சவூதி ஹஜ்ஜ் அமைச்சகம் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த காலங்களில் ஹஜ்ஜ் வேண்டுமெனில் பெரும்பாலோர் தனியார் டிராவல் ஏஜென்சியை நாடி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து ஹஜ்ஜ் பேப்பர் தயார் செய்து பின்னர் ஹஜ்ஜ் செய்ய முற்படுவர். அதுவும் தனியார் டிராவல் நிறுவனம் இதற்க்கு அதிக பணம் வசூலித்து வந்தனர். இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் போலியானவை. அவர்கள் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலித்து அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமான நபர்களை ஹஜ்ஜிக்கு அனுப்பி வந்தனர். மேலும் தரமான போக்குவரத்து வசதியோ , தரமான உணவோ அல்லது தரமான தங்குமிட வசதியோ கொடுப்பது கிடையாது. இதனால் ஹஜ்ஜ் நேரங்களில் அரசாங்கத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தியது. இதனை கருத்தில்கொண்டு இவ்வருடம் அரசாங்கமே களத்தில் இறங்கியது.
அதாவது அரசானை எண்: M/58 (28.10.1426) சவூதி ஹஜ்ஜ் அமைச்சகத்தின் புதிய இணையதள மூலம் ஹஜ்ஜ் செல்பவர்கள் தங்களது விபரங்களை அளித்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  இணையதள மூலம் பணம் செலுத்தி எளிதாக ஹஜ்ஜ் அனுமதியை பெறலாம்.

கடந்த ஆண்டு ஹஜ்ஜ் செய்ய 19,000 பேர் அனுமதி பெற்றனர். இவ்வருடம் 41,000 பேர் ஹஜ்ஜ் செய்ய இத்திட்டத்தின் மூலம் அனுமதி வழங்கபட்டுள்ளது.
கீழ்க்கண்ட இணைய தளம் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து 48 மணி நேரத்தில் அதற்குறிய பணத்தை செலுத்தி உறுதி செய்து கொள்ளவும்.



இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்  

இத்திட்டத்தின் நிபந்தனைகள்:
1) இதற்க்கு முன் ஹஜ்ஜ் செய்து இருந்தால் அதன் காலம் 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்
2) 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
3) ஒருவர் ஆன்லைன் மூலம் 10 பேர் வரைக்கும் பதிவு செய்ய மட்டுமே அனுமதி.

வழங்கும் சேவைகள்:
போக்குவரத்து வாகன வசதி, உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.

கட்டண விகிதம்:
பஸ்: 5000, 4800, 4400, 4150, 3600, 3100, 2500
ரயில்: 5250, 5050, 4650, 4400, 3850, 3350, 2750

தங்களுடைய பயண விபரங்களை பற்றி மேலும் அறிய 19998 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Wednesday 25 June 2014

E.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்



முன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்டிக்க, தவறுதலாக அதிக பில் கட்டணம் வருதல் இது போன்ற இன்ன பிற பிரச்சனைகள். இதெல்லாம் ஒரே நாளில் முடிய கூடிய காரியமும் இல்லே. இதற்காக நம்முடைய சோலி எல்லாம் விட்டுட்டு அலைய வேண்டி வரும். லஞ்சமும்  கொடுக்க வேண்டும் ஆனா வேலை மட்டும் சீக்கிரமா முடியவே ..முடியாது. அப்ப என்ன தான் பண்ணலாம்?

கவலையை விடுங்க.

நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு புது கணக்கை (user account) உருவாக்குங்க.
அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிங்க.

புதிய கணக்கு உருவாக்க:

கீழேயுள்ள லிங்க் ஐ சொடக்கவும்

இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்  

அதில் New User என்பதை கிளிக் செய்யவும்,
Region= உங்களது மாவட்டத்தை செலக்ட் செய்யவும், பின்னர் உங்களது EB எண்ணை கொடுக்கவும் உதாரணமாக 060 012 550 இது மாதிரி இருக்கும். இப்பொழுது உங்களது பெயர் மற்றும் முகவரி வரும். இதனை சரிபார்த்து நம்முடைய தான என உறுதி செய்த பின்னர் Confirm எனும் பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனி உங்களது பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அதில் கேட்க்கபட்டுள்ள அனைத்து தகவல்கள் கொடுத்து பின்னர் submit செய்யவும். 

இனி உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் வரும் அதனுடன் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்த வுடன் உங்களது புதிய கணக்கு உயிர் பெற்று விடும். இனி நீங்கள்  தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் இனி எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் கையாலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம். 




இந்த இணைய தளத்தின் வழியாக என்ன என்ன பயன்?

1) துரிதமாக கட்டணம்: ஆன்லைன் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம்.

2) கட்டணம் விபரம்: யூனிட் வாரியாக கட்டண விபரம் அறியலாம்.

3) ரசிது பெட்டகம்: மின் கட்டணத்திற்கான ரசிதை  பிரின்ட் எடுக்கலாம்.

4) கணக்கு விபரம்: (இதில் நம்முடைய முழு முகவரி, மாதந்திர மின் கட்டணம் செலுத்திய விபரம், இதர கட்டணம் செலுத்திய விபரம் மற்றும் நிலுவையிலுள்ள கட்டண விபரங்கள், முன் பணம் செலுத்தி இருந்தால் அதன் விபரம் ஆகியவற்றை இங்கு முழு விபரமுடன் காணலாம்.

5) காப்புத்தொகை: உங்களது கணக்கிலுள்ள வைப்புத்தொகை மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் ஆகியவற்றை காணலாம்.

6) பில் விபரம்: இதில் எவ்வளவு யூனிட், எவ்வளவு பணம் அதன் விபரம்

7) எண் சேர்த்தல்: இங்கு நம்முடைய வீட்டு EB எண் மட்டுமில்லாமல் நம்முடைய உறவினர் வீட்டு எண்ணையும் சேர்க்கலாம், அதற்க்கான மின் கட்டணமும் செலுத்தலாம்.

8) எண் நீக்க: நாம் இணையத்தில் இணைத்த எண்ணை நீக்கவும் செய்யலாம்.

9) கடவு சொல் மாற்ற: நாம் கொடுத்த கடவு சொல்லை (password) மாற்றலாம்.

10) முகப்பு மாற்ற: இங்கு தங்களது இணையத்தில் பதிந்த சுய விபரத்தை மாற்றி கொள்ளலாம்.

11) உதவி மையம்: நம்முடைய சில சந்தேகளுக்கு இங்கு பதில் கிடைக்கும்.

12) பொது புகார்: நம்முடைய புகார் எதுவா இருந்தாலும் இங்கே ஆன்லைன் மூலம் தெரிவித்து அதற்க்கான தீர்வும் காணாலாம்.

13) புகார் நிலை: நம்முடைய புகார் எந்த நிலைமையில் உள்ளது எனவும் அறியலாம்.

அவ்வளவு தான் இனி  E.B சம்பந்தபட்ட வேலைகளை வீட்டில்/ ஆபீஸில் இருந்து கொண்டே முடிங்க.. நேரத்தை மிச்சப்படுத்துங்க.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் கேளுங்க....
பிடிச்சா சேர் பண்ணுங்க....



Tuesday 3 June 2014

சவூதியில், பணியாளர்கள் தங்களது பிரச்சனைகளை எவ்வாறு,எங்கு, எப்படி முறையிடுவது?



சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தாங்கள் பணி புரியும் இடங்களில் பல வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

அதாவது முதாலாளி தொழிலாருக்கு சேர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளை அதாவது விடுப்பு பணம்(வெக்கேசன் மணி), சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது, எக்ஸ்சிட் (Exit) கொடுக்க மறுப்பது இன்ன பிற பிரச்சனைகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது, யாரை அணுகுவது, எப்படி முறையிடுவது  என்பது பற்றி பார்ப்போம்.

தொழிலாளர் பிரச்சனைகளை பல வழிகளில் முறையிடலாம், அவற்றில் முக்கியமான சிலவற்றை பற்றி பார்ப்போம்.

1) ஆன்லைன் மூலம் முறையிடலாம்.
2) தொழிலர் அமைச்சகம்(ministry of labor) தொலைபேசி எண் மூலம் முறையிடலாம்.
3) இந்திய தூதரகத்தில்(Embassy Of India) முறையிடலாம்.
4) இந்திய இணை தூதரகத்தில் (Consulate General Of India) முறையிடலாம்.
5) தொழிலாளர் நீதிமன்றத்தில் (Labor Court) அணுகலாம்.
6) தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு:

இம்முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்:

1)ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்: 
Ministry of Labor வெப் சைடிற்கு சென்று ஆன் லைன் மூலம்  மிக எளிதாக தங்களது குறைகளை முறையிடலாம். அவ்வாறு முறையிடும் போது தங்களது  பெயர், முகவரி, இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளபட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன் லைன் புகார் தெரிவிக்க இங்கே சொடக்கவும்

2) தொழிலர் அமைச்சகம்(ministry of labor) தொலைபேசி எண் மூலம்:

1) Riyadh: 01-4039857
2) Kharj : 01-4548231
3) Dawadmi : 01-6420920
4) Majmaa: 06-4321724
5) Wadi Addawasir: 01-7840264
6) Zulfi: 06-4220235
7) Shaqra: 01-6221342
8) Makkah: 02-5420745
9) Jeddah: 02-6311687
10) Taif: 02-7461616
11) Qunfudah: 07-7320761
12) Madinah: 04-8654416
13) Yanbu: 04-3222688
14) Al-Ula: 04-8840830
15) Qassim (Buraidah): 06-3250387
16) Onaizah: 06-3640285
17) Al-Rass: 04-3333502
18) Hail: 06-5321139
19) Dammam: 03-8261419
20) Ahsa: 03-5822801
21) Hafr albatin: 03-7220220
22) Khobar: 03-8641541
23) Abqaiq: 03-5661324
24) Jubail: 03-3620150
25) Khafji: 03-7660380
26) Ras Tannurah: 03-6670424
27) Aseer (abha): 07-2242128
28) Bisha: 07-6226718
29) Baha: 07-7253240
30) Najran: 07-5224995
31) Jazan: 07-3213671
32) Jazan: 07-3213671
33) Jauf: 04-6241766
34) Qurrayyat: 04- 6421108
35) Tabuk: 04-4221181
36) Al Wahj: 04-4421970
37) Arar: 04-6627128
38) Turaif: 04-6521029

3) இந்திய தூதரகத்தில் முறையிடலாம்:
தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அனைத்து வேலை நாட்களில் 9.00a.m லிருந்து 12.30 p.m வரை  கீழ் கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்.

Labor Complaint Form- தரவிறக்கம் செய்ய இங்கே சொடக்கவும்


4) இந்திய இணை தூதரகத்தில் முறையிடலாம்:
தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நமது இந்திய இணை தூதரகத்தை அணுகலாம்.

Labor complaint-consulate தரவிறக்கம் செய்ய இங்கே சொடக்கவும்


5.தொழிலாளர் நீதிமன்றத்தை  (Labor Court) அணுகலாம்:
கீழேயுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
1) Makkah: 02 5420745
2) Jeddah: 02-6311687
3) Taif: 02-7495200
4) Qunfudhah: 07-7321250
5) Madina: 04-8654417
6) Yanbu: 04-3222488
7) Alula: 04-8840830
8) Abha: 07-2242128
9) Bishah: 07-6226718
10) Albahah: 07-7253240
11) Najran: 07-5221431
12) Jazan: 07-3226446
13) Tabuk: 04-4221181
14) Al Wahj: 04-4421970

அனைத்து தொழிலாளர் பிரச்சனைகளும் மேற்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும்.
நீங்கள் செல்லும்போது சரியான ஆவணகளை அதாவது "வேலை ஒப்பந்த நகல், பாஸ்போர்ட் நகல்,இக்காமா நகல், கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேலும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பம் அரபியில் இருக்க வேண்டும்.

6) தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு:

தொழிலாளர் நலன் காக்கவே புதியதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள்  நேரில் சென்று முறையிடலாம்.
உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைகளுக்கும் சட்ட ரீதியாக தீர்வு காண உதவிடுவர்.

முகவரி:
Office of the Domestic Workers Committee,
The Director of welfare & Guidance
Consultant of Training & Social Reserch,
Near Al Hamra ( formerly sofitel) Hotel, Jeddah.
Tel: 6616688 Fax: 6653238 Cell: 0504658803





Tuesday 27 May 2014

மத்திய அமைச்சரவை அதிகார பூர்வ இலாக்கா பட்டியல்:


 மத்திய அமைச்சரவை அதிகார பூர்வ இலாக்கா பட்டியல்:


இணை அமைச்சர்கள்:







Saturday 24 May 2014

சவூதி நாட்டினருக்கேன்று ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளின் பட்டியல் (List of Profession reserved for Saudis)


சவூதியில் உள்ள நிறுவனங்களில் கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய கூடிய வகையில் சவூதி அரசாங்கம் வரையறுத்துள்ளது.

…இப்பதவிகளில் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும், மற்ற நாட்டினர் இப்பதவிக்களுக்கு வர இயலாது எனவே இப்பொழுது நீங்கள் வகிக்கும் பதவி கீழே உள்ள பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்களுடைய பதவி கீழே உள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தால் உடனே உங்களுடைய இக்காமா வில் குறிப்பிட்டுருக்கும் பதவியின் பெயரை மாற்றுவது நல்லது.  இல்லையன்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம்.

கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும்:
(List of Professions Reserved for Saudis)
  1. Executive HR Manager
  2. HR Manager
  3. Labor Affairs Manager
  4. Staff Relations Manager
  5. Staff Relations Specialist or Individual Affairs Clerk
  6. Recruitment Clerk or Employment Clerk
  7. Staff Affairs Clerk or Personal Affairs Clerk
  8. Duty Clerk or Attendance Control Clerk
  9. Receptionist 
  10. Hotel  Receptionist 
  11. Health Receptionist 
  12. Complaint Clerk or Claim Clerk
  13. Cashier
  14. Security Guard
  15. Representative or Broker
  16. Key Specialist 
  17. Custom Broker or Custom Clearance Employee
  18. Female Sales Specialist for Ladies Shop.

Thursday 22 May 2014

கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கு விண்ணப்பம் செய்து உள்ளீர்களா? ஆன் லைன்ல் பரிசோதித்து கொள்ளவும்



தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வானையம் ஜூன் 16 ம் தேதிக்கு 2,342 பதவிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்த உள்ளது. மேலும் விபரம்   அறிய இங்கே http://bakrudeenali.blogspot.com/2014/04/2014.html சொடக்கவும்.
 கிட்டதட்ட 10 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன.
முறையாக விண்ணபித்து, சரியான விண்ணப்ப மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தியவர்க்ளுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் இத்தேர்விற்க்கு விண்ணப்பித்து இருந்தால் உடனே கீழ்க்கண்ட இணையத் தளத்திற்க்குச் சென்று  உங்கள் பதிவு எண்ணைக் கொடுத்து உள்ளே நுழைந்து உங்களது தகவல்கள் சரியாக உள்ளதா என பரிசோதித்து கொள்ளவும்.
இணையதள முகவரி
http://www.tnpsc.gov.in/Appstatusget-VAO2K14.html

 நீங்கள் சரியான முறையில் விண்ணப்பம் செய்து அனனத்து கட்டணமும் செலுத்திய பின்னரும் உங்களுடைய பெயர் இந்த லிஸ்டில் இல்லையா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியது  contacttnpsc@gmail.com என்ற மின் அஞசலுக்கு விண்ணப்பதாரர் பெயர்,முகவரி,  பதிவு எண், பணம் செலுத்திய ரசிது ஆகியவற்றின் நகலை இணைத்து நாளை (23.05.2014) க்குள்அனுப்ப வேண்டும்.

Saturday 17 May 2014

சவூதியில் உங்களுடைய இக்காமா எண்ணில் வேறு ஒருவரது மொபைல் எண் பதியப்பட்டுஉள்ளதா? உஷார்!!



உலக அளவில் தீவிரவாதம் தலை தூக்கி உள்ளதால், அதனை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்ச்சிகள் செய்து வருகின்றன.
 இதற்க்கு பெரும்பாலும் தொலைதொடர்பே முக்கியம். அதிலும் அடுத்தவர் மொபைல் எண்ணை  வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது .

மொபைல் எண்  மூலம் எந்த தவறு நடந்தாலும் காவல் துறை அந்த போன் நம்பர் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவரையே கைது செய்வர்.

 எனவே, வேறு ஒருவருடைய சிம் கார்டு உங்களுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு அதனை தவறாக பயன் படுத்தினால், அது உங்களுக்கே பெரும் ஆபத்தாக முடியும். இதனை தவிர்க்க உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும்  பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது கட்டாயம்.

சவூதி அரேபியாவில் CITC (Communication and Information Technology Center) என்ற நிறுவனம், தவறாக ஈடுபடும் நபர்களை கண்காணித்து வருகின்றது.

எனவே நீங்கள்  செய்ய வேண்டியது, உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும்  பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது.

கீழே உள்ள எண்களுக்கு SMS செய்வதன் மூலம், உங்களுடைய இக்காமாவில் யாருடைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறியலாம்.  இது முற்றிலும் இலவசம்.

அதில் உங்களுடைய மொபைல் எண்  இல்லாமல் வேறு எண் இருந்தால் உடனே அருகில் உள்ள தொலை தொடர்பு அலுவலத்திற்கு உங்கள் இக்காமா காப்பியையும் கொண்டு சென்று   அந்த எண்ணை நீக்கி விட்டு உங்கள் தொலைபேசி எண்ணை பதியவும்.

1) STC வாடிக்கையாளர்கள் 9988 என்று டைப் செய்து 902 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

2) MOBILY வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 616166 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்

3) ZAIN வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 700123 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்



Friday 2 May 2014

Vacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி?



நீங்கள் சவூதியில் எந்த ஒரு கம்பனியில் வேலை செய்தாலும் Vacation மற்றும் End of service என்பது கண்டிப்பாக உண்டு.

Vacation Money:
கம்பனியில் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் தன்னுடைய பணிக்கால இடையில் vacation (Leave ) செல்ல விரும்புபவர்கள் இதனை பெற தகுதியுடையவர். அதாவது "ஒரு வருடத்திற்கு 21 நாள் சம்பளம்" வேக்கசன் மணியாக கிடைக்கும். இதனை அவர் வெக்கேசன் லீவில் செல்லும்போது கிடைக்கும். 5 வருடத்திற்க்கு மேலாக பணி புரிந்து வந்தால் அவருக்கு வெக்கேசன் பணம் வருடத்திற்க்கு 30 நாள் சம்பளமாக கணக்கிடப்படும்.
ஊதாரணமாக
ஒருவரது சம்பளம்= 2000/-
வேலை பார்த்த வருடம்: 1 வருடம்.
அப்படியானால் அவருக்கு கிடைக்கும் வெக்கேசன் மணி
2000/30 x 21 = 1,400/- கிடைக்கும்.
ஆகையால் ஒரு வருடத்திற்கு SR 1,400/- கிடைக்கும்.
2 வருடம் என்றால் 2000/30 x 21x 2yrs = SR 2,800/- கிடைக்கும்.
இந்த வெக்கேசன் மணி என்பது ஒவ்வொரு தடைவையும் வெக்கேசன் செல்லும் போது கிடைக்கும்.

End Of Service Money:
தாம் வேலை பார்க்கும் கம்பனியின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப விரும்புபவர்கள்  இதனை பெற தகுதி பெற்றவராவார்.
(அதாவது தாம் வேலை பார்க்கும் கம்பனியிலிருந்து Exit அல்லது Transfer பெற்று செல்ல விரும்புபவர்கள் இதனை பெற முடியும்)
இது வருடத்திற்கு 15 நாள்கள் சம்பளமாக ஒதுக்கப்படும்.

பொதுவாக இதனை இரு வகையாகயாக பிரிக்கலாம்:
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்.

இதில் முதல் பிரிவு
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
கீழே உள்ள அட்டவனையை பார்த்தது தெரிந்து கொள்ளவும்.
Cases
Years
Entitlement
ESB Award
Case 1
< 2 Years
No
No
Case 2
2 - 5 Years
1/3
Half Salary
Case 3
5 - 10 Years
2/3
Full Salary
Case 4
> 10 Years
Full
Full Salary






Case 1: 
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் அவருக்கு "எந்த ஒரு சர்வீஸ் பணமும் கிடைக்காது"         
Case 2: 
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திலிருந்து 5 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு " மூன்றில் ஒரு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்திருந்தால் 
சம்பளம் 2000/30 x 15 x 3yrs x 1/3= SR 1000/- கிடைக்கும்.
Case 3: 
பணியாளர் தன்னுடைய வேலையை 5 வருடத்திலிருந்து 10 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு " மூன்றில் இரண்டு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
             சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
                                                    ------------
                                                       11,000
                               =11000 x 2/3= 7,333/- கிடைக்கும். 

Case 4: 
பணியாளர் தன்னுடைய வேலையை 10 வருடத்திற்கு அப்புறம் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு முழு சர்வீஸ் பணம் கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 12 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
             சம்பளம் 2000 x 7yrs = SR 14000/-
                                                    ------------
                                                         19,000 கிடைக்கும். 

இரண்டாம் பிரிவு :
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்:


Years
Entitlement
ESB Award
Case 5
< 5 Years
Full
Half Salary
Case 6
> 5 Years
Full
One Salary

 Case 5: 
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்குள் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 15 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக  கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/- கிடைக்கும்.

Case 6: 
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்கு பின் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 30 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக  கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
முதல் 5 வருடம் --சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/- 
அடுத்த 3 வருடம் --           சம்பளம் 2000 x 3yrs = SR 6000/- 
                                                                                          -------------
                                                                                             9,000/-   கிடைக்கும்.
                                                                                         =======


குறிப்பு:
வேக்கேசன் மற்றும் சர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது " சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.
இதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.


மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்

Saturday 26 April 2014

அலுவலத்தில் அடுத்தவர் வேலையையும் செய்து மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பவரா நீங்கள் அப்படினா இதை படிங்க

தாம் செய்யும் வேலையை மன நிறைவோடு மகிழ்ச்சியாக செய்தாலே போதும் யாருடைய தயவு இல்லாமல் தன்னுடைய இலக்கை அடைந்து விடலாம்.        

பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தன்னுடைய மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க பல வழிகளை கையாளுவது உண்டு.

காக்கா பிடிப்பது, ஜால்ரா அடிப்பது, வேலையில் எப்போதும் பிசியாக இருப்பது போல் நடிப்பது.. இன்னும் சிலர் அடுத்தவர் வேலையையும் தானே செய்து காட்டி நல்ல பெயர் எடுக்க நினைப்பது.
அடுத்துவர் வேலையை பற்றி தெரிந்து கொள்வதில் தப்பில்லை வேலைக்கான நேர்முக தேர்வில் கூட தன்னுடைய வேலை தவிர எக்ஸ்ட்ரா எனக்கு இன்னன்ன வேலை தெரியும் என்று சொன்னால் சந்தோஷ படுவார்கள். ஆனால் வேலைக்கு சேர்ந்த பின்னர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல் அடுத்தவர் வேளையில் மூக்கை நுழைப்பது தவறு. அப்படி நுழைத்தால் என்ன ஆகும் என்பதை ஒரு சிறு கதை மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஒரு வியாபாரி தன்னுடைய பொருட்களை எடுத்து செல்ல ஒரு கழுதையையும், வீட்டை பாதுகாக்க ஒரு நாயையும் வளர்த்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் வியாபாரியின்  வீட்டில் திருட அவன் வீட்டின் கதவருகே வந்து நின்று கதவை திறக்க முயற்சி செய்கிறான்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த நாய் குலைக்காமல் மௌனமாக இருந்தது.
இதனை கண்ட கழுதை " இவனுடைய வேலை குலைப்பது, ஆனால் சும்மா இருக்கானே..சரி நாம் சத்தம் போட்டு தன்னுடைய எஜமானை எழுப்பி நல்ல பெயர் எடுக்கலாம்" என நினைத்து கழுதை கத்தியது...
கழுதை கத்தியவுடன் திருடன் ஓடிவிட்டான். வீட்டின் எஜமான் கதவை திறந்துப் பார்த்தான் வெளியில் யாரும் இல்லை... நாயை பார்த்தான், நாய் தலையை கீழே தாழ்த்தி பார்த்தது, கழுதையை பார்த்தான், கழுதை பெருமையுடன் அவனை பார்த்தது. பின்னர் வீட்டின் உள் சென்று ஒரு பெரிய விறகு கட்டையை எடுத்து வந்து... நல்ல தூங்கிட்டு இருக்கும் போது கத்துவியா? கத்துவியா? என கழுதையை கட்டையால் அடி பிய்த்து விட்டான்.

இப்ப புரிகிறதா....                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

Friday 11 April 2014

அரசாங்க சம்பந்தமான முக்கியமான விண்ணப்ப படிவங்கள்

1) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம்
http://goo.gl/W9NZZi

2) பட்டியலில் பெயரை சேர்க்க/ நீக்க விண்ணப்ப படிவம்
http://goo.gl/EeMc8h

3) அனாதை பெண்கள் திருமண உதவி திட்டம் -விண்ணப்பபடிவம் 
http://goo.gl/SojdJv

4) இருப்பிட சான்றிதழுக்கான விண்ணப்பபடிவம்

5) குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

6) ஆதரவற்ற முதியோர், விதவை, உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பம்

7) நலிந்தோர் குடும்ப நல உதவி திட்ட விண்ணப்ப படிவம்

8) புல எல்லை அளந்து காட்ட கோருவதற்கான விண்ணப்பம்

9)  பாஸ்போர்ட் க்கான விண்ணப்பம்

10) ஓ பி சி சாதிச்சான்றிதல் விண்ணப்ப படிவம்

11) பிறப்பிடச்சான்றிதளுக்கான விண்ணப்ப படிவம்

12) வாரிசுரிமை சான்றிதழுக்கான விண்ணப்ப படிவம்

13) வருமானச் சான்றிதழுக்கான விண்ணப்ப படிவம்

14) இந்து திருமண பதிவு விண்ணப்ப படிவம்

15) அரசாங்க மாணவர் விடுதியில் சேர விண்ணப்ப படிவம் (பி.சி )

16) உதவித் தொகை விண்ணபத்தை புதுபித்தலுக்கான விண்ணப்ப படிவம் (SC/ST/BC/MBC)

17) உதவித் தொகை விண்ணப்ப படிவம் (SC/ST/BC/OBC)

18) வாகனங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம்

19)வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவம்

20) வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க/ நீக்க விண்ணப்ப படிவம்

21) இறப்புச் சான்றிதல் விண்ணப்ப படிவம்

22) நிரந்திர சாதிச் சான்றிதல் பெற விண்ணப்ப படிவம்

23) கிறிஸ்த்துவ திருமண பதிவுக்கான விண்ணப்ப படிவம்

24) கட்டிட உரிமையானை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் Building License





 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir