Monday 3 June 2013

மனைவி வளர்த்த பூனை:


ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையை கண்டாலே பிடிக்காது. அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.

ஒரு நாள் அப்பூனையை தூக்கிக்கொண்டு இருபது வீடு தாண்டி விட்டு விட்டு  வந்தான். 
வீட்டிற்கு வந்தால்... பூனை வாசலில் நின்று கொண்டுருந்தது. வெறுப்படைந்த அவன் அந்த  அந்த பூனையை அடுத்த தெருவில் விட்டு விட்டு வந்தான்.

அன்றும் அந்த பூனை அவனுக்காக வீட்டில் காத்துக்கொண்டு இருந்தது.
வெறுப்படைந்த அவன் அந்த பூனையை காரில் ஏற்றிக்கொண்டு வலது புறம், இடது புறம் என மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.

சிறிது நேரம் கழித்து மனைவிக்கு போன் செய்தான். மனைவியிடம் " உன்னுடைய பூனை விட்டிற்கு வந்து விட்டதா?" என கேட்டான். மனைவி " ஆம்" என்று சொன்னாள்.   


 உடனே கணவன் " போனை பூனைக்கிட்ட கொடு, எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை " என்றான்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir