Monday 22 July 2013

புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல்


புதிய ரேஷன் கார்டு: இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கோரி விண்பப்பித்தவர்களில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன்கார்டு அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பியும் வரவில்லை. இதனால் http://tirunelveli.nic.inஎன்ற இணையதளத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் இடம் பெற்றிருப்பின் தற்போது வசித்து வரும் முகவரிக்கான விட்டுத் தீர்வை ரசீது, மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு முதலான ஆவனங்களுடன் மனுதாரரே மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மனுதாரர் அல்லாத பிற நபர்களிடம் குடும்ப அட்டை வழங்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir