Thursday 26 September 2013

ALFA NETWORK Wireless எளிமையான முறையில் டவுன்லோட் செய்ய.



வளைகுடா நாடுகளில் பெரும்பாலோர் ALFA NETWORK ஐ பயன் படுத்துவார்கள். இது தங்களுடைய wifi சிக்னலை அதிகபடியாக இழுத்து உங்களது கணினியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தும்.

இந்த ALFA NETWORK பணம் கொடுத்து வாங்கி அதிலிருக்கும் வன்தட்டை (CD) தங்களது கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள்.

சில நேரங்களில் அந்த வன்தட்டை நாம் எங்கே வைத்தோம் என மறந்து இருப்போம் அல்லது தொலைத்துவிட்டிருப்போம்.

அந்த மாதிரி நேரங்களில் இந்த இனைய தளம் உங்களுக்கு கை கொடுக்கும்.

கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று கீழ்க்கண்டவாறு செய்யவும்.



Product Category: Indoor Wireless
Product Model: AWUS036H (உங்களது ALFA மாடல் நம்பரை பார்க்கவும்)
Type of File: Driver
Keyword: AWUS036H
Enter secure Code to Download: (கட்டத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்தை பார்த்து கட்டத்திற்குள் டைப் செய்யவும்.
பின்னர் Download என்பதை கிளிக் செய்தால் கீழே கண்டவாறு வரும்
அதில் Windows / Mac / Linux என இருக்கும் உங்களுடைய கணினி Windows xp அல்லது Windows 7 எனில் Windows என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அந்த Driver உங்களுக்கு கணினியில் தரவிறக்கம் ஆகும்.


அதனை கிளிக் செய்து run என்பதை கிளிக் செய்வதன் மூலம் ALFA NETWORK Wireless வேலை செய்யும்.

குறிப்பு: ரன் செய்யும் முன்னர் உங்களது ALFA NETWORK Wireless பின்னை கணினியில் சொருகி இருக்க வேண்டும்.

அவ்வளவு தான், இனிமே உங்களது கணினியின் Wireless Signal ஐ பாருங்கள், கண்டிப்பாக அதிகமாக கூடி இருக்கும், இணைய வேகமும் முன்னை விட அதிக விரைவாக இருக்கும்..


இணைய முகவரி
http://www.alfa.com.tw/download.php


Wednesday 25 September 2013

சிகரெட் பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள்!!



ஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.

 அதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்

அதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றும்,

இரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,

மூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...

இதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.

எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்..? அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.

அதனை விசாரித்த நீதிபதி,  அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.

மேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.

அவர் கூறியதாவது...
"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை  தான் கூறினேன்"

முதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்?"

இரண்டாவது "அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன? பெண் என்ன? " எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.

மூன்றாவதாக  "அவர்களுடைய வீட்டிற்கு திருடன்  வரவே மாட்டான்" என சொன்னேன். இதுவும் உண்மை தான்

புகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு "வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்" என திரும்பி சென்று விடுவான்.  என்றார்..


நீதிபதி:!!!!















Friday 20 September 2013

Bio-Data; Resume; CV - இவைகளுக்கான வேறுபாடு.

Bio-Data:

இது அந்த மனிதனுடைய தகவல்கள், பண்புகள், பொழுதுபோக்கு, விருப்பம் மற்றும் கல்வி தகுதியை விளக்கும்.

Resume:

இது ஓன்று அல்லது இரண்டு பக்ககங்களை கொண்டது. உங்களுடைய திறமைகள், அனுபவங்கள் மற்றும் கல்வி தகுதியை குறிக்கும்.

CV (Curriculam Vitae):

இது மிகவும் நீளமானதாகவும், அனைத்து தகவல்கள் அடங்கியதாகவும் இருக்கும்.  மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை உண்டையதாக இருக்கும். அனுபவங்களை அதிகமான அளவில் அடங்கி இருக்கும்.

Tuesday 17 September 2013

பாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..?



இதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.

அப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்?

அதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...? அதாவது..
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்

ஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது.  அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமே... பாம்பு,  பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...?


Monday 16 September 2013

தேசிய நாளை(National Day) முன்னிட்டு சவூதியில் 2 நாட்கள் விடுமுறை



சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை (National Day) முன்னிட்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வாரவிடுமுறை அமலில் உள்ளது.

சவூதி தேசிய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 4 நாட்களுக்கும் விடுமுறை விட சவூதி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

 ஆகையால் சவூதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருநாள் (செப்டம்பர் 23) மட்டுமே விடுமுறையாக இருக்கும்.









Sunday 15 September 2013

பூனை குறுக்கே போனால்.......


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை  காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.

பல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..?"

"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்."

ஆவ்வ்வ் ......

Saturday 14 September 2013

டி என் பி சி குருப் 2 தேர்வு அறிவிப்பு 2013



டி என் பி சி தேர்வு அறிவிப்பு 2013

மொத்த பணியிடம்: 1064
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013
தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013

வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உட்பட 1064 பணியிடங்களுக்கு குருப் 2 தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 5 ம் தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே கிளிக் பண்ணவும்
http://tnpscexams.net/tnpsc_142013/index.php

இத்தேர்வு 3 கட்டமாக நடைபெறும்.
முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு

மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்

http://www.tnpsc.gov.in/notifications/14_2013_not_eng_ccse_II(Grp_II).pdf

வளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை!!


வளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு  மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா  மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.

எனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல் ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது  அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும்.  வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.

இவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.

Friday 13 September 2013

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ஒரு பார்வை


இந்திய ஜனதொகையில் 67 % பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகை செய்யும் ஒரு மசோதா தான் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா.

கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ அரிசி அல்லது
கிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது
கிலோ 1 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 5 கிலோ தானியம் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

இதனை ரேஷன்கடைகள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த மசோதா நல்லதா.. அல்லது கெட்டதா என அறிய முடியவில்லை. ஏனெனில் இந்த திட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிடமிருக்கும் புழுத்து போன அரிசி, உணவு தானியங்களை விரைவில் விற்பதற்காகவா அல்லது கையில் இருக்கின்ற வற்றை விரைவில் விற்று விட்டு அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி விட்டு அந்நிய முதலிட்டை விட போகிறதா? என தெரியவில்லை.

Wednesday 11 September 2013

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற



கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

http://eci-citizenservices.nic.in/default.aspx

அல்லது
http://www.elections.tn.gov.in/eregistration/E_Registration.aspx


இந்திய தண்டனைச் சட்டங்கள்


இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை
(பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு 312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை(பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு (பிரிவு 299 முதல் 311)
2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு (பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு 375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377)
இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல் 402)
4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல் 404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405 முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல் 414)
7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல் (பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை (பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:
கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்ு)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல் 510 வரை)
குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511)
சட்ட சீர்திருத்தங்கள்
1, பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரியதடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரஸ்ப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தண்டிக்க பயன்படுத்த முடியாது என்றது.
2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து.
3 பிரிவு 497ன் கீழ் மற்றொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

Monday 2 September 2013

வளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்


தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு!

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.

தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)

நேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.

குற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி Hussain Ghani-Riyadh.

Sunday 1 September 2013

இந்த வருடம் அனுமதி இல்லாமல் ஹஜ்ஜ் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!!


தற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி  அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து  வரும் ஹஜ்ஜ் பயணிகளை   20 % குறைத்து உள்ளது.

எனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு  வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.

புனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.  
 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir